.
நவீன உலகில் அன்பு, பாசம் என்பன எல்லாம் அருகிப் போகின்ற போக்கில் உள்ளது போலவே தாய்மை உயர்வும் அப்படியே சென்று கொண்டு போவதைக் காண முடிகின்றது.
இவற்றில் ஒன்றுதான் தாய், சேய் இணைப்பு என்பது. தற்போது பாலூட்டுவதைப் பெரும்பாலும் தவிர்த்துக்கொள்ளும் மனப்பான்மை வலுவடைந்து செல்கின்றது. எனினும் இதற்கு முரணாகவே நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களும் ஆய்வுக் கற்கைகளும் நகர்கின்றன. பல ஆய்வுக் கற்கைகளின் மூலம் பெறப்பட்ட முடிவுகளே இங்கு தரப்படுகின்றது.
தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் ஒரு குழந்தை மிக அதிகளவு பயன்களைப் பெறுகின்றது. அதே வேளையில் தாய்ப்பால் ஊட்டுவதால் குழந்தைக்கு ஏற்படும் பயன்கள் பற்றி அறிந்து தாய்மார்கள்கூட தமது உடல் அழகைக் கருத்திற்கொண்டு அதைத் தவிர்ப்பதைக் காணமுடிகின்றது.
தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் ஒரு குழந்தை மிக அதிகளவில் பயன்களைப் பெறுகின்றது. அதேவேளையில் தாய்ப்பால் ஊட்டுவதால் குழந்தைக்கு ஏற்படும் பயன்பள் பற்றி அறிந்து தாய்மார்கள் கூடத் தமது உடல் அழகைக் கருத்திற்கொண்டு அதைத் தவிர்ப்பதைக் காண முடிகின்றது.
தாய்ப்பால் ஊட்டுவது என்பது நினைக்குமளவிற்கு எந்தவொரு தாயினது உடல் அழகையும் குறைக்கும் என்றில்லை. உடலில் தேவைக்கு அதிகமாக வேண்டாத பாகங்களில் கொழுப்பு தேங்குவதைக் குறைக்கும். அதாவது நாரிப் பகுதி, வயிற்றுப் பகுதிகளில் சேரும் கொழுப்பின் அளவைக் குறைக்க இது பெரிதும் உதவும். இங்கு உடலின் ஓமோன் சமநிலை ஒன்றும் உருவாக்கப்படுகின்றது. இவற்றினால் மேலும் பல நன்மைகளைத் தாய் பெறமுடிகின்றது.
பாலூட்டல் என்பது வெறுமனே புட்டிப்பாலைக் குழந்தை உறிஞ்சுவதன் மூலம் அதை அருந்திக் கொள்வது போன்றதொரு தொழிற்பாடு அல்ல, பால் சுரக்கப்படுவது தொடாக்கம் வெளியேற்றப்படுவது வரை சுரப்பிகள் பலவற்றின் ஒருங்கிணைப்பும் ஓமோன்கள் பலவற்றின் பங்களிப்பும் நடைபெறுகின்றது.
இது அங்கங்கள் அதாவது மூளையின் பல பகுதிகள் சுரப்பிகள் என்பவற்றுடன் தொடர்பாக தகவல் பரிமாற்றங்களுடன் நடைபெறும் ஒரு பொறிமுறையாகவே உள்ளது.
இவ் உடல் அழகு என்னும் விடயத்தைப் பலபடிகள் தாண்டி மார்புப் புற்றுநோய்க்கான ஆபத்தை மிக உயர் அளவில் குறைக்கின்றது.
நாட்டுக்கு நாடு மனித இனத்திற்கு இனம் பாலூட்டும் தன்மை, கால அளவு என்பன வேறுபட்டுக் கொண்டே போகின்றது. இது அந்நாட்டின் கலாசாரத்தைத் தழுவியதாகவே காணப்படுகின்றது.
பாலூட்டலால் உடலில் ஓமோன் சமநிலை ஏற்படுவதுடன் ஈஸ்திரோஜன் என்னும் ஓமோனின் அளவு குறைவடையும் போது மார்புப் புற்றுநோய்க்கான ஆபத்தும் குறைவடைகின்றது.
இவற்றுடன் சூலகத்தின் சூல்கொள்ளல் தவிர்க்கப்படுகின்றது. இவற்றினால் புற்றுநோய்க்கான சாத்தியக்கூறு மேலும் வலுவாகக் குறைக்கப்படுகின்றது.
இவற்றைவிட பாலூட்டும் போது வெளியேறும் பாலில் கொழுப்புத் தன்மை இருப்பதால் தாயின் உடலில் சிலவகையான கொழுப்புக்கள் குறைக்கப்படுகின்றன. இதனால் புற்றுநோய்க்கான உருவாக்கிகள் (யுனipழளந வளைளரந இல் தங்குவதற்கான வாய்ப்பு அரிதாக்கப்படுகின்றது.
மேலும் பாலூட்டுவதன் மூலம் மார்பின் பாற்கான்களின் அகவணியில காணப்படும் கலங்க் விகாரமடையும் தன்மை குறைக்கப்படும். இதனால் புற்றுநோய்க்கான விகாரங்கள் உருவாதல் தவிர்க்கப்படுகின்றது.
பொதுவாகப் பாலூட்டுவதனால் மாதவிடாய் நிறுத்தத்திற்கு முன்னான வயது காலப்பகுதியில் பெண்களில் ஏற்பட்கூடிய வகையான புற்று நோய்க்கான வாய்ப்புக குறைகின்றது.
தாய்ப்பாலூட்டலினால் குழந்தை பெறும் நன்மைகள் பலவுண்டு. எனினும் இவற்றையெல்லாம் விஞ்சியதாகக் குழந்தை எதிர்காலத்தில் வளரும் காலங்களில் மார்புப் புற்றுநோயின் தாக்கத்திற்கு ஆளாவதும் குறைக்கப்படுகின்றது.
தொற்றுநோய், சுவாசநோற், மற்றும் பல நோய் நிலைகளின் தாக்கமும் வலுக்குன்றியதாகவே காணப்படும்.
மேலும் பாலூட்டலினால் மகப்பேற்றின் பின்னரான காலணங்களில் ஏற்படும் குருதியிழப்பு குறைகின்றது. அத்தோடு தாயானவள் தனது மகப்பேற்று காலத்தின் முன்னான கால உடற்பருமனை விரைவில் அடையவும் முடிவதுடன் என்பு வன்மையடைவதற்கான கல்சியம் மீள்உருவாவதற்கான பொறிமுறையை மேலும் துரிதப்படுத்துவதால் முதிர்வின் போது ஏற்படும் என்பு முறிவு நோய் (Phலளழைடழபiஉயட குசயஉவரசந ) இல் இருந்தும் பாதுகாக்கப்படும்.
தாய்ப்பாலூட்டல் என்பது சமூகத்தில் அண்டி பாசத்தை கட்டியெழுப்புவதுடன் உடலை கட்டழகாகவும் பேணுவம் நோய் நிலைகளில் இருந்து தப்பிக் கொள்ளவும் உகந்த வழிமுறையாகும்
No comments:
Post a Comment