Pages

Sunday, January 2, 2011

இளவயதுக் கர்ப்பம்

ரம்மியமான இளமை பருவம். இது@ வண்ணாத்துப்பூச்சியின் சிறகின் கீழ் வாரமெல்லாம் வசித்திடக் கேட்கும். மெல்லிய காற்றின் சங்கீதம் காதுக்குள் மெல்லிசையாய் ஒலித்திடக் கேட்கும், இதயச் சிறகை உரக்க விரித்து காதல் வானில் இதமாயப் பறக்கக் கேட்கும். சிறகசைத்து காற்றில்.. பூமலரும். பூ மலர.. வண்டின் வருகை கண்டு பூ மெல்ல நகும். வண்டு தேனை உண்டு பூவை விட்டு மெல்ல நகரும். வாடிய பூ சமூகத்தின் கரடுமுரடான தரையில் பட்டு கண்ணாடிப் பூவாய் சில்லென்று சிதறிப் போகும்.

பொதுவாக யௌவனப் பருவமானது 13-19 வயதுக்குட்பட்டது. இதனை ஆங்கிலத்தில் வுநநயெபந என்று அழைப்பர். இந்தப் பருவத்தில் பெரிதும் உளரீதியான, உடல்ரீதியான முதிர்ச்சியைப் பெண்கள் கொண்டிருப்பதில்லை. இதனால் இந்தப் பருவத்தில் இவர்கள் தாயாகும்போது அதிகமான அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

அனேகமாக இவர்கள் தாயாவதுகூட ஒரு திட்டமிட்ட செயற்பாடாக அமையாது. தவறுதலான செயலாகவே அமைந்ததுவிடுகிறது. அத்துடன், இவர்கள் தங்கி வாழ்பவர்களாகவும், கல்வியைத் தொடர்பவர்களாகவும் மற்றும் சமூகத்தின்கூர்மையான பார்வைக்குள் தவறாது சிக்கிக் கொள்பவர்களாகவும் அமைகின்றனர். இவர்கள் உடல் ரீதியாகப் பெரிதும் முதிர்ச்சியடைந்திருப்பதில்லை.

இவர்களின் கருப்பை வளர்ச்சி, இடுப்பு என்பனவும் கர்ப்பத்தைக் காக்கும் தகவு அற்றதாகவும், பிரசவத்துக்கு ஏற்புடையதல்லதாகவும் காணப்படுகிறது.

இதனால் இவர்களுக்குப் பொதுவாக மருத்துவ கருவிகளைப் பயன்படுத்தியே பிரசவிக்க வேண்டிய தேவைப்பாடு ஏற்படுகிறது. இதனால் தாய்க்கும் சேய்க்கும் பாதிப்புக்கள்ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம்.

அத்துடன், இவர்கள் பிரசவத்துக்கு ஒத்துழைக்கும் தன்மையும் மிகக்குறைவாகவேயுள்ளது. இவை மட்டுமல்லாது இவர்களின் மனநிலை - ஒத்துழைப்பின்றிய தன்மைகளினாலும், போசாக்குக் குறைபாடுகள் காணப்படுவதாலும், (வேண்டாத கர்ப்பம், கர்ப்பம் பற்றிய போதிய அறிவின்மை) இவர்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பிரசவிக்கத் தவறுகின்றார்கள். அத்துடன், கர்ப்பவதிகள் (கிளினிக்) பிணி ஆய்நிலையத்துக்குக் கிரமமாகச் செல்லாது விடுவதாலும், அங்கு வழங்கப்படும் போசாக்கு மாத்திரைகளை உட்கொள்ளாது விடுவதாலும், வைத்திய ஆலோசனையை செவிமடுக்கவும் தவறுவதால் இவர்களின் குழந்தைகளின் நலம் பாதிப்படைய சாத்தியக் கூறுகள் மேலும் அதிகமாக உள்ளன.

இந்தச் செயற்பாடுகளால் குறை பிரசவங்களுக்கும், காலம் தவறிய பிரசவங்களுக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கின்றன. தவிர இவர்கள் தாயாகும் போது மேலும் சில சிக்கல்கள் ஏற்பட சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது. அதாவது குருதிசார் உபாதைகள் (P.P.ர்.Pஐர்) சிறுநீர்த்தொற்று, அமையம் தவறிய கருத்தங்கல் (நுஉவழிiஉ Pசநபயெnஉல), அதிபர வாந்தி (ர்லிநசநnளைளை பசயஎனையசரஅ) என்பனவாகும்.

அத்துடன், இவர்கள் கருப்பை புற்றுநோய்க்கு ஆளாகவும் சாத்தியக்கூறுகள் உள்ளன. மற்றம் யௌவனப் பருவத்தில் கர்ப்பம் தரித்தல் ஏற்புடையதல்லாத ஒரு விடயம் என்றே கூறவேண்டியுள்ளது. இவை தவிர யௌவனப் பருவ கர்ப்பம் தரித்தல் - தவிர்க்கும் முறைகளாலும், குற்றவியல் கருச்சிதைவுகளாலும் (ஊசiஅiயெட யடிழசவழைn) - தாய் மரணம் போன்ற பாரதூரமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும்.

எமது சமுகத்தில் இந்நிலையை மேலும்வலுவாக்கும் நிகழ்வாகவே அலைபேசிகளின் காணெளி நெடும் தகவல்பரிமாற்றங்கள் அமைகி;றன…..

ஓன்றுக்கு மேற்பட்ட பாலியல் தொடர்புகளால் வலுச்சேர்க்கப்படும் கருப்பை கழுத்;துப் புற்றுநோய்

புற்றுநோய் என்றால் எல்லாம் கொடியன அல்ல என்ற உண்மை காணப்படினும் கருப்பைப் புற்றுநோய் சீர்செய்யக் கூடியது.ஆனால் சிரமம்மிக்கது என்றே கருதவேண்டும். இதன் போது அனூவிக்கின்ற அசௌகரிகங்கள் மிகமிக அதிகம் என்றே கூறவேண்டும்.இங்கு ஆக்கிரமிப்பு செயற்பாட்டை மேற்கொள்ளாத புற்றுநோய்க்கு முன்னான நிலை காணப்படுகிறது. இந்நிலையில் இவை இனங்காணப்படின் வரவேற்கத்தக்க தொருவிடயமாகும். எனினும் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால்; பெரும்பான்iயான சந்தற்பங்களில் மெல்ல மெல்ல ஆக்கிரமிப்பு புற்றாக மாறுவது அது நிகழ்ந்தே தீரும் என்றுதான் சொல்வேண்டும்.
இங்கு ஆக்கிரமிப்பு வல்லமையுடைய புற்றுநோய் கவனிக்கத் தவறவிடப்படின் கருப்பை கழுத்தின் சுற்றயப் பகுதிகளையும் ஊடுருவிவிடும். இந்நிலையின் முன் இனங்காணப்படின் பெரும்பாலும் குணப்படுத்த முடியும். எனினும் இது தவறுவது என்பது தவறுதலாகவே நடந்தேறும்;. தவறாகிவிட்டது. இதனால் கருப்பைக் கழுத்தைத்தாண்டிப் பரவி குணப்படுத்தும் தகவை குறைத்துக் கொள்கின்றுது .இங்கு உடலுறவின் பின்னரோஇ மாதவிடாய் நிறுத்தத்தின் பின் அல்லது மாதவிடாய் தவிர்ந்த காலங்களில் ஏற்படும் இரத்தப்போக்கு இதைவிட உடலுறவின் போது வலி மற்றும் யோனிவழியூடாக இரத்தத்துடன் கழிவுப் பொருள் வெளியேற்றம் இவ்வாறு அமைவதுடன் இத்துடன் இவர்கட்கேயென்று விசேடித்த துர்நாற்றம் மேலும் இதன் நகர்வை அடிப்படையாகக் கொண்டு 5 வகைப்படும்
1.. தொடக்க நிலையில் அசாதரண கலங்களை pநி ளஅநயச சோதனை மூலம் இனங்காணலாம்
2..கருப்பைக் கழுத்துடன் எல்லைப்படுத்தப்பட்ட நிலை
3.. யோனியின் மேற்பகுதிக்குப்பரவியிருத்தல்.
4..யோனியின் கீழ்ப்பகுதிக்குப் பரவியிருத்தல்.
5..பெருங்குடல் சிறுநீர்ப்பை இஉடலின் ஏனைய பாகங்களுக்கு பரவி தனது ஆக்கிரமிப்பு செயற்பாடுகளை மேற்கொள்கின்றது .
இவற்றின் பரவல் இவ்வாறு இருக்க ஆய்வுக் கற்கைகளை ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் தொடர்பு கனதியாகவே நிரப்பியவண்ணமுள்ளது. ஆண்களில் காணப்படக் கூடிய மனிதப்பபிலோமா வைரசுகளின் இனப்பெருக்கச் சுரப்புகளினூடான பரவல் இந்நோய்க்கான காரணமாகக் கருதப்படுகிறது. இதனால் பல ஆண்களுடனான பாலியல் தொடர்பு கருப்பை கழுத்து புற்றுநோயில் காத்திலமாகவே பங்களிக்கின்றது ; ஆய்வுக்கற்கைகளும் அவ்வண்ணமே நகர்கின்றன

இதயத்தை வலுவிழக்க செய்யும் மது போதை

மதுஅருந்துவதால் மாரடைப்பு ஏற்படும் என்பது யாவரும் அறிந்தது. எனினும் மது
அருந்துவதால், இதயத்தின் திறனான செய்பாடு பாதிக்கப்படும் தன்மை பற்றியே இங்கு
கருதப்படுகின்றது. அதாவது இதயத்தின் தசை பாதிப்புக்கு உட்படுத்துவதாலும் அதைத்
தொடர்ந்து மீள் தன்மை இழக்கப்படுவதாலும், திடீர் மரணம் வரை பல தொடர்
நிலைகளை காணமுடிகின்றது.
இதயத்தின் உள்ளறைகள் பெரிதாக்கப்படுவதுடன் இதயம்;பருமனில் பெருக்கும். இதயத்
தசைகள் ஈர்க்கப்பட்ட நிலையில் காணப்படுவதால் இதயத்தின் வலிந்த பாய்ச்சுகையை
திறம்பட செயற்படுத்த முடியாது போகின்றது. இதன்படிநிலைகளாக இதய செயலிழப்பு
ஏற்படுகன்றது, இத்துடன் அல்லாது இதயத்துடிப்பு ஒழுங்கு தவறுதல் போன்றனவும் ஏற்படும்.
இங்கு இதயம் விரிவடைகின்றது. இதனால் குருதிப்பாச்சுகை வலுவிழக்கிறது. அத்துடன்
குருதி இதயத்தின் உள் அறைகளுள் தேங்குவதால் குருதி உறைவதற்கான வாய்ப்பு
அதிகரிக்கின்றது.
இவ்வாறு உள்ளறைகளில் குருதிஉறைவதால் ஏற்படும் சிறுதுணிக்கைகள் குருதியூடு
சுற்றியோட்டப்படடு பாரிசவாதம், மாரடைப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்
வாய்ப்புக்கள் உள்ளன. இவ்வாறான இதயத்தின் திறனான செய்பாடு பாதிக்கப்படும்
தன்மை ; ஏற்பட பல காரணிகள் அமைவாகின்றன. பரம்பரைக் காரணி மற்றும் சூழல்
காரணி, தனி நபரின் நீர்ப்பீடனம் என்பன காரணமாகும். இவற்றில் பரம்பரைக்
காரணியாக என்னும் போது குறித்த நபரின் உறவினர் திடீர் மரணம் மற்றும் இதய
நோய்களால் தாக்கப்பட்டவராக அமையின் மேற்படி இதயத் தசைகளின் வன்மையை
மதுசாரம் மேலும் வலுக்குன்றச் செய்யும் இதனால் இதயம் மிகவும் ஈய்ந்த நிலையை
அடையும்.
இவ்வாறான பரம்பரைக் காரணி உடையவர்கயில் இதயத்தின் திறனான செய்பாடு
பாதிக்கப்படும் தன்மை; ஏற்பட மதுசாரம் மிகவும் காத்திரமான பங்கை
வகிக்கின்றது.
இந்நோய் நிலை 20 – 40 வயதுடையவர்களில் இனங்காணப்படுகின்றது. எனினும்
இனங்காணப்படாமல் திடீர் மரணத்தை ஏற்படுத்தும் போது பரிதாப மரணம்
ஆகிவிடுகின்றது. பொதுவாக ஓர் இளைஞன் 20 வயதில் மது அருந்தத் தொடங்கினால்
மேற்படி நோய் நிலையை அடைவது சாத்தியமாகின்றது.
அத்துடன் பரம்பரைக் காரணிகள் மற்றும் சூழல் காரணியாகள் செல்வாக்கு செலுத்தும்
போது வைரசு நோய்த்தாக்கமும் அமைந்து விடின் குறித்த இளைஞன் இந்நோயால்
பாதிப்புறும் வாய்ப்பு மேலும் மேலும் மெருகூட்டப்படுகின்றது.
பொதுவாகக் இந்நோய் நெஞ்சுவலி, மயக்கம் என்பவற்றை அறிகுறியாகக்
காண்பிப்பினும் அறிகுறி எதுவுமில்லாமல் திடீர் மரணத்தை உண்டு பண்ணும் போது
இனங்காண்பது மிகவும் கடினமாகவே உள்ளது.
இவற்றோடு மட்டுமல்லாது இந்நோயால் பாதிப்புறுபவரின் வேலை செய்யும் வலுவும்
குறைவடையும். இலகுவில் களைப்படைதல் ஏற்படும். இவ்வாறு ஏற்படுவது என்பது வயது
முதிர்ந்த ஒவருக்கு ஏற்படின் அது ஏற்றுக்கொள்ள முடியும் . குறித்த நபருக்கான வேலை
அளவு குறைவாகவே காணப்படும் என்பதால். ஆகவே இளவயதினில் இந்நிலை ஏற்படும் போது
குடும்பம் பாதிப்புறும் நிலை ஏற்படுகின்றது. இதன் பாதிப்புகளும் தொடர் நிலைகளாக
மேலும் மேலும் பாதிப்புற செய்யும்.

வலி நிவாரணிகளில் வலுவிழக்கும் சிறுநீரகங்கள்

வலி நிவாரணிகளின் பாவனை தற்போது மிகவும் அதிகரித்துச் செல்லுகின்ற ஒரு போக்கு காணப்படுகின்றது. மேலும் வலி நிவாரணங்களின்றி வாழ முடியாத நிலையில் வலுவாகவே அடிமைகளாகிவிட்ட ஒரு பரிதாப நிலையும் நம் மக்களிடையே காணமுடிகின்றது. எனினும்இவ்வலி நிவாரணிகள் எல்லாம் என்ன? நல்லவை தான என சிந்திக்க வேண்டிய தேவை எற்படுகின்றது. வலி நிவாரணிகளை தேவையின்றியும் தேவைக்கு அதிகமாகவும் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி எம் மக்கள் அறிந்தும் அறியாதவையாகவே உள்ளன.

சிறுநீரகங்கள் என்றால் அவைதான் உடலில் காணப்படுகின்ற சுத்திகரிக்கும் தொழிற்சாலைகள் என்றே நினைவு கொள்ள வேண்டும். குருதியின் சுத்திகரிப்பு செய்யும் செயலையே இவை செய்கின்றன. மிகவும் எளிமையாகக் கூறுவதனால் உடல்கலங்கள் ஒவ்வொன்றும் தமக்குத் தேவையான பதார்த்தங்களை பயன்படுத்தி வெளிவிடும் கழிவுப்பதார்த்தங்களை குருதியினுள் வெளிவிடுகின்றன. இதனால் குருதியில் கழிவுப்பதார்த்தங்கள் அதிகரிக்கும் இக்கழிவுப் பதார்த்தங்கள் உயர் செறிவடையின் சில உடல் அங்கங்களின் செயற்பாடுகள் பாதிப்புறும் இந்நிலையை வராது தடுக்கவே சிறுநீரகங்கள் இக்கழிவுப் இரசாயனப் பதார்த்தங்கள் குருதியில் இருந்து வடித்து அகற்றுகின்றன.

மேற்படி செயலை செய்கின்ற சிறுநீரகங்களின் தொழிற்பாட்டில் ஏற்படும் இடர்பாட்டினால் வலிநிவாரணிகளின் வலிந்த பாவணை ஏற்படுத்துகின்றது.

நெடுங்கால தலைவலி முதுகுவலி மாத்திரைகள் மற்றும் வலிமாத்திரைகள் மாதவிடாய் தலைவலி நிவாரணிகள் போன்றனவே சிறுநீரகத் தொற்று, சிறுநீரகக் கற்கள், இதயம் வலுவிழந்த நிலை மற்றும் உடலில் இருந்தால் மிகையாகாது நிரழப்பு போன்ற சந்தர்ப்பங்களில் மேலும் வலுவுடன் சிறுநீரகங்களை தாக்குகின்றன.

இதனால் ஆரம்ப நிலையில் அறிகுறிகள் புலப்படாது போகலாம். மேலும் சிறுநுPரளவு அதிகரித்தல் சிறுநீரில் கிருமிகாணப்படல் போன்றனவும் நாரிநோ,மற்றும் சிறுநீர் சிவப்பு சார்ந்த நிறமாகக் கழிக்கப்படலாம்.

இவ்வாறான நிலையை நோயாளி எய்தும் போது வயிற்றுப்புண் அறிகுறிகளும்; வலிநிவாரணிகளின் செயற்பாட்டால் காணப்படலாம். இவற்றைவிட உயர்குருதியமுக்கம் குருதிச்சோகை, சிறுநீருடன் புரதம் கழிதல் போன்ற நிகழ்வுகளும் எற்;படலாம்.

மேற்படி; வலிநிவாரணிகளின் மிகைப்பயன்பாட்டால் தூண்டப்படும் சிறுநீரகத் செயற்திறன் குறைதல் யுயெடபநiஉ Nநிhசழியவால என்பர்.

இந்நோய் ஆரம்பநிலையில் இனம் காணப்படின் வலிநிவாரணிகள் பயன்பாட்டை நிறத்தி நோயின் தாக்கத்திலிருந்து மீளமுடியும

செவிப்பறைகளைத் துளையிடும் குச்சிகள்

செவிப்பறை மென்சவ்வானது காதுகளை சுத்தம் செய்யும் போது தவறுதலாக
கிழிக்கப்பட்டு விடுகின்றன. இதனால் கேட்டற் செற்பாடு பாதிப்புறுகின்றது என்று
மட்டுமல்ல கால ஓட்டத்தில் செவியுள் தொற்று ஏற்பட்டு மூளைக்காய்ச்சல் வரை
ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

நமது சூழலில் காதுகளை சுத்தம் செய்வதற்கு hair pinஇ ளுயகநவல pin இவற்றை விட
தீக்குச்சிகள், நுயச டிரனள என்ற பலவிதமான பொருட்கள் மக்களிடையே
காணப்படுகின்றன. இவற்றினால் செவிப்பறைகள் கிழிக்கப்பட்டுவிடுவதே ஈற்று
விளைவாகின்றது.

செவியின் உடற் கூற்றிலை எடுத்து நோக்கின்………… மூன்று பகுதிகளாகக்
காணப்படுகின்றது. இது வெளிப்புறமாக காதுக்கால்வாய் செவிப்பறையுடன் முடிகின்றது….
நடுச்செவி என்பது செவிப்பறை மென்சவ்வை ஆதரமாக கொண்டு என்புக்கட்டமைப்புகளை
கொண்டுள்ளது இதன் தொடர்ந்து உட்செவி நரம்புசார் கட்டமைப்புகளை கொண்டு
காணப்படுகின்றது. செவிப்பறை என்பது… மிருதங்கம், மேளம் இவற்றில் தோற்பகுதி
எவ்வாறு அதிர்வுறுவதன் மூலம் சத்தம் எழுப்பப்படுகின்றதே அதுபோல செவிப்பறையும்
அதிர்வுறுகின்றது. மேளம் மிருதங்கம் என்பன மிகப்பெரும் அதிர்வுகளுக்கு ஏற்ப
அதிர்கின்றன ஆனால் செவிப்பறையானது மிகச்சிறிய அதிர்வுகளுக்கு ஏற்ப
அதிர்கின்றது. உணர்திறன் மிக்கது. இங்கு ஏற்படும் அதிர்வுகளை மிகைப்படுத்தி
கடத்துவதை செய்வனவாகி என்புப்பகுதிகள் காணப்படுகின்றன இவ்வென்புகள் ஏந்தியுரு,
பட்டையுரு என்புகள் என அழைக்கப்படும். இவை அதிர்வுகளை நரம்புப் பகுதிக்கு
கடத்துகின்றன. இவ்வாறு ஒரு நுணுக்கமான தொழிலை மிகவும் சிறப்பாக செய்யும்
செவியின் செவிப்பறையானது மிக மெல்லிய ரிசுப் போன்றது. இன்னும் எளிமையாகக்
கூறினால் உணவுகளை பொதி செய்ய பயன்படும் டரnஉh ளாநநவ போன்றது. இதனால் இதன்
உணர்திறன் மிகக்கூடவாக உள்ளது.

அதேவேளை இது மென்மையானதாக இருப்பதால் குச்சிகள், ஊசிவகைகள், கிளிப்வகைகள்,
இயர்பட் இவற்றினால் இலகுவில் துளையிடப்படுகின்றது. காதுகளை சுத்தம் செய்யும்
நோக்கில் இவற்றைப் பயன்படுத்தும் போது சற்று விசை அதிகமாகக்
கொடுக்கப்பட்டால் கூட இவை கிழிவுறுகின்றன.

இவை கிழிவுறுவதால் காதில் இருந்து நீர் வெளியேறும் இது சீழ் தன்மையானதாக
தொற்றுக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்ந்து வெளியேறும். இவ்வாறான நிலையில்
தொடர்ந்து நகருமாயின் மூளை வரை கிருமித்தொற்று ஏற்படும் வாய்ப்புக்கள் உண்டு.

காதுகளை சுத்தம் செய்வது பற்றி சிறிது பார்ப்பின் இதற்கு சிறப்பான கருவி
காணப்படுகின்றது. இதில் பூதக்கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. இப்பூதக் கண்ணாடியுரு
மருத்துவம் காதுக்கால்வாய் ஊடாக அவதானித்த வண்ணம் மிகவும் அவதானமாக
நிதானமாகவே காது சுத்தம் செய்யும் செயலை மேற்கொள்வார். சற்று நிதானக்குறைவு
ஏற்பட்டால் கூட செவிப்பறை மென்சவ்வு கிழிவுறும் என்பதால் இந்நிலை ஏற்படாது
தவிர்க்க அக்கருவியில் உள்ள பூதக்கண்ணாடியின் உதவியுடனேயே
மேற்கொள்ளப்படுகிறது.

இது இவ்வாறிருக்க நாம் சாதாரணமாக காதுகளை சுத்தம் செய்வதை எடுத்து நோக்கின்
எமக்கு செவிப்பறை காதில் எங்கு இருக்கிறது என்று தெரியாது எமது கண்ணால் எமது காதை
அவதானிக்க முடியாது. இதைவிட செவிப்பறை எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதும்
தெரியாது. ஏதோ ஒரு குத்து மதிப்பில் காதினுள் குச்சிகள்.. ஊசிகள் இவ்வாறு பட்ட
பொருட்களை செலுத்தி காதில் செவிப்பறையை குத்தி துளையிடுவதையே செய்கின்றாக
உள்ளது.

சாதாரண மக்கள் குச்சிகள், கிளிப் வகைகளை பயன்படுத்தி காதுகளை சுத்தம் செய்யும்
நோக்கில் செவிப்பறையை துளையிடுகின்றனர்.

எனினும் நாகரிகம் மிக்கவர்கள் கடைகளில் விற்கும் இயர் பட்களை பயன்படுத்தி
காதுகளில் செவிப்பறைகளை துளையிடுகின்றனர். இயர் பட் பாவனை தற்போது மிகவும்
நாகரிகம் மிக்க செயற்பாடு என்றே கருதுகின்றன. இயர் பட்களை பயன்படுத்தி
காதுகளில் செவிப்பறைகளை துளையிட்டுக் கொண்டதுடன் நின்றுவிடாது அதை உணராமல்
“இயபட்” என்ற ஆங்கிலச் சொல்லை ஆங்கிலேயப்பாணியில் மிகவும் மெருகேற்றப்பட்ட
உச்சரிப்புகளுடன் சொல்லிக் கொள்வதே நகைப்புக் குரியவிடயம் என்றால்
மிகையாகாது.

இந்த இயர் பட்கள் காதில் உருவாகும் மெழுகளை (அதாவது குடும்பி என்றும் அழைப்பர்)
சுத்தம் செய்யுமா என்றால் தெளிவாக விடை எதுவும் இல்லை என்று தான் கூற வேண்டும்
இவற்றின் நுணியில் காணப்படும் பஞ்சில் மெழுகின் மீது காணப்படும் ஈரப்பற்று
மட்டுமே ஒட்டிக் கொள்ளும் மீதி ஒட்டிக்கொள்வது மிக அரிது. அத்துடன் இவற்றை
பயன்படுத்தும் போது மெழுகு செவிப்பறை நோக்கி உள்நோக்கி தள்ளப்படுகின்றது.
இதனால் மெழுத்திண்மம் ஏற்பட் காதுவலி ஏற்படும் சந்தர்ப்பம் உருவாகின்றது.

இவை எல்லாம் தாண்டி செவிப்பறைகள் கிழிவடைவதால் ஏற்படும் தொற்று நாட்பட்டதாக
மாறுவதற்கும் - மூளையிலும் தொற்று உருவாகவும் வாய்ப்புக்கள் உண்டு. இவற்றை விட
காதின் அயற் பகுதிகளில் காணப்படும் என்புகளில் உள்ள காற்று இடைவெளிகள் கீழ்
தங்கி அசௌகரியங்களையும் உண்டுபண்ணும். இவற்றோடு நின்றுவிடாது காதுகள் கேட்காது
போவதும் வழமையே. இவ்வாறு பட்ட துர் விளைவுகளையே இந்த இயர்பட் தொடக்கம்
குச்சிகள், கிளிப் வரை செய்கின்றன.

இதைவிட நாகரிகம் மிக்கவர்கள் தமது காதுகளுக்கு ஏற்படும் தீமையை அறிந்தும்
அறியாமல் செவிப்பறைகளை துளையிட்டுவிட்டு அதற்கான மருத்துவத்தை தேடி அலைவதை
கணிப்பிடும் போது இது தேவைதான என்பது ஓர் எண்ணம் உருவாகும்

“பம்”மும் அடிச்சுக் கொண்டு “தம்”மும் அடிக்கலாமா?

எங்களில் பலருக்கு ஆஸ்துமா நோய் பற்றி அனுபவம் இருக்கும் சொல்லப்போனால் ஆஸ்துமா நோயறியாத வீடு அகிலத்தில் இருந்தால் அது பெரிய ஆச்சரியம் என்றுதான் இருக்கும் ஆஸ்துமா நோயை…. பலர் பலவிதமாக அழைப்பர்…. அதாவது முட்டு, தொய்வு, இழுப்பு எப்படி அழப்பினும் பரம்பொருள் ஒன்றுதான் என்பதுபோல சுவாசக்காற்றுக் குழாய்களில் ஏற்படும் மீளக்கூடிய சுருக்கம்…. இது பரம்பரைக்காரணிகள் மற்றும் சுழற்காரணிகளால் எல்லைப்படுத்தப்படுகின்றது.

இங்கு சுவாசக்குழாயில் ஏற்படும் சுருக்கம் எவ்வாறு நிகழ்கின்றதெனில் சுவாசக்குழாயின் சுவரில் வீக்கம் ஏற்படும் போது சுவாசக்குழாயின் உள்விட்டம் குறைவடையும் அதுவே சுருக்கம் என்று கருதப்படுகின்றது…. இவ்வாறான விடயம் பற்றி சற்று சிந்தனையை திருப்பினால் ஜயோ மூச்சுக்குழாய்கள் உள் விட்டம் குறைகின்றனவா. சுருக்கின்றனவா அப்படியானால் காற்று நுழையுமா இல்லை மூச்சுக்கு என்ன கதி இப்படி எண்ணம் தன்னாலே மனக்கண் முன் தோன்றாமலாவிடும். அப்படி என்றால் மூச்சு நின்றால்…. மரணமா… இப்படி எல்லாம் சிந்தை தன்னைத் தானே கூர் பார்த்த வண்ணம் தான் இருக்கும். இப்படியான ஒரு நிலையில் உண்மையிலேயே அவசர சிகிச்சைக்குரிய தேவை விரைவில் மணித்துளிகளில் அல்ல வினாடித்துளிகளிலே ஏற்பட்டுவிடும் என்று கூறினால் அது மிகையான ஒரு விடயமாக கருத முடியாது. இது எப்படி என்று பார்த்தால் ஒவ்வாமை… அதாவது அலேர்ஜி இன்னும் சொல்லப்போனால் ஏதோ ஒத்துக்கொள்ளாத தன்மை என்றே வைத்துக் கொள்வோம்…. தூசு துணிக்கைகள் காற்றில் வரும் மகரந்தமணி, புழுதி இப்படி பல பொருட்கள் ஒவ்வாமைக்குரிய செயற்பாட்டை செய்கின்றன….. இதன் போது ஏற்படும் ஒவ்வாமைத்தன்மை சுவாசக்குழாய்களில் ஏற்படின் சுவாசச் செயற்பாடுகள் பாதிப்புறும் என்பது சொல்லாமலே புரிய வேண்டும்.

இது இவ்வாறு இருப்பினும் இந்நோயானது இலகுவில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய ஒரு நோய் என்பது. மிக முக்கியமான ஒருவிடயம் ஆனாலும் சிகிச்சை ஏன் பலனளிக்கவில்லை என்ற கேள்வி உண்டு… அதிலும் உண்மை உண்டு. அதற்கு பல காரணங்கள் அமையலாம். இவற்றில் தூண்டற் காரணங்களைத் தவிர்தல் மற்றும் கிரமமான மருந்துப்பாவனை இன்மை என்பன முக்கியமானவை புகைத்தல் ஒரு தூண்டற்காரணியாக அமைவதுடன் மேலும் மேலும் சுவாசப்பையை நலிவுறச் செய்கின்றது.

ஆஸ்துமா நோயிற்கான சிகிச்சை முறையை எடுத்து நோக்குகின்ற போது…. நோயிலிருந்து விடுவிப்பவை சுநடநைஎநசள என்று அதாவது நோய்வரும் பாவிக்கும் மருந்துகள் (ஏநவெழடin) இவை என்ன செய்கின்றன என்றால் சுவாசக்குழாயின் சுருக்கத்திற்கு எதிரிடையாகவே செய்ற்படுகின்றன. இவை சுவாசக்குழாய்களை விரிக்கின்ற செயற்பாட்டை செய்கின்றன அதாவது சுவாசக்குழாயில் காணப்படும் தசையின் மீது தமது தொழிற்பாட்டை நிகழ்த்துகின்றன. இதனால் சுவாசக்குழாய்கள் விரிவடைகின்றன காற்று உள் நுழைகின்றது… நோய்நிலை தன் கோரப்பிடியை சற்று தளர்த்துகின்றது. எனினும் இவை அவ்வப்போது ஏற்படும் தீவிரத்தன்மையை குறைக்கவே பயன்படும் ஆனால்… இவற்றினால் இவ்வாறு நோய் நிலையின் போது சுவாசப்பைகளில் சுவாசச்சுவட்டில் ஏற்பட்ட அழற்சியால் ஏற்பட்ட நொய்தல் நிலையை பெரிதளவில் மாற்ற முடியாது.

அந்த வேலையை செய்பவை Pசநஎநவெநசள என்று அழைக்கப்படும் இவை பெரும்பாலும் ளுவநசழனை வகைக்குரியவையாகும். இவ்வகை மருந்துகளும் உறிஞ்சி வாங்கிகளில் அதாவது பம்களில் காணப்படும். இவற்றினை போலவே சுநடநைஎநசள உம் பம்களில் காணப்படும். சுநடநைஎநசள நோயின் தீவிர நிலை ஏற்படும்போது பயன்படுத்தினும் Pசநஎநவெநசள் வகை பம்கள் காலையும் மாலையும் ஒழுங்காகப் பயன்படுத்த வேண்டியவை ஏனெனில் சுவாசப்பாதையில் ஆஸ்துமா நோயின் போது ஏற்படும் அழற்சியால் ஏற்படும் நொய்தல் தன்மை அதாவது காயங்களை ஆற்றும் சக்தி கொண்டவை.

இவ்வகை பம் பாவிப்பதன் மூலம் காயங்கள் ஆறுகின்றன ஆனால் தம் என்று கூறும் புகைத்தலால் காயங்கள் ஆகின்றன எனவே மருந்தையும், நோயாக்கியையும் சேர்த்தே பயன்படுத்தும் போது மருந்து எதற்காக பாவிக்க வேண்டும் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும்.

பொதுவாக எமது சமூகத்தில் அனேகம் பேர்… சுவாக நோயுடன் கூட வாழ்கின்றனர் அதாவது 45 வயதை தாண்டியவர்களில் அனேகர் தமது சுவாசப்பையை புகையில் பதனிட்டவர்களாகவே காணப்படுகின்றன. அவர்கள் பெரும்பாலும் மூச்சுவிட முடியாத நிலையில்… சுவாசிப்பதே சுமை என்ற நிலையில் மருத்துவமனைக்கு வருகின்றனர் ஆனாலும்… குணமாகிவிட்டால் மீண்டும் வேதாளம் முருக்கை மரத்தில் ஏறிக்கொண்டது என்பது போல உதடுகளில் சிகரட் ஏறிக் கொள்கிறது…

இங்கு என்னதான் கூறியும் பலன் இல்லை தம் அடிப்பதை நிறுத்திவிட்டால்… பம் அடிப்பதில் பலன் இருக்கும் இல்லையென்றால் பம் அடிப்பதில் பலன் இல்லாத நிலையில் சுவாசநோய் மேலும் தன் ஆக்கிரோசமான முகத்தையே வெளிக்காட்டும். அது அவ்வாறே இதயத்தையும் பலவீனமாக்கும் செயற்பாட்டையும் மேற்கொள்ளும் இவ்வாறே கூட்டுவிளைவுகள் எல்லாம்… ஒNரு திசையில் நகர்ந்துவிடும்…. அதன்பின் மீட்சி இருக்கா? என்பது தான் கேள்விக்குறி
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இளவயதிதினருக்கும் இடுப்பு வலியின் இம்சைகளா?

இளவயதினர் என்றால் அதுவும் துள்ளுகிற இளமைப்பருவம் அந்தத் துள்ளித்திரயும் வயதினில் இடுப்புவலி எனின் இதென்ன கதை என்று கேட்கிற நடைமுறையில் இப்படி ஓர் இம்சை இருக்கிறது என்றால் அதுவும் வியப்புத்தான். ஆனால் வலியின் கோரத்தை கருதும் போது இப்படியும் ஒரு கொடுமையா? என்று எண்ணம் தோன்றாமல்விடாது தோன்றியே தீரும் இப்படிப்பட்ட ஒரு நிலை இங்கே கருதப்படுகிறது.
இடுப்புவலி, நாரிநோ, நாரிப்பிடிப்பு இப்படி வலிக்கு பெயரிடப்பட்டு கொண்டு இருப்பினும் இடுப்புவலி பெருமளவில் குறித்த வயதினரை மட்டுமே குறிவைக்கும் என்றே எண்ணம் தோன்றும் அதெல்லாம் அந்தந்த வயதுக்காரர்கள் சமாச்சாரம் இப்படித்தான் கருதும் நிலை இருக்கிறது எனினும் இளம்வயதினரை அதாவது வாலிப வயதினரை இலக்கு வைக்கும் இடுப்புவலி காணப்படுகின்றது. இது இடுப்பின் இருபுறமும் சற்று தாழ்வாக ஏற்படுகிறது. இதன் பிடிப்புத் தன்மை அல்லது இறுக்கமான நிலை பகலில் மோசமாகவும் பின் உடல் அசைவுடன் குறைவடைகின்றது. இந்த நோய் நிலை யுமெலடழளiபெ ளுpழனெலடவைளை எனப்படும் இதன் ஆரம்பநிலையில் இனம் காணுதல் என்பது தவறப்படும் ஒரு விடயமாக அமையலாம் ஏனெனில் இது பெரும்பாலும் அமைதியான போக்கை கடைப்பிடிக்கின்றது. இந்நோய் நிலையில் முதுகு கூனலுறும் இதனை தொடர்ந்து முள்ளந்தண்டின் அருகில் காணப்படும் தசைகள் நலிவுறுகின்றன.
இதன் போது ஏற்படும் உபாதை முள்ளந்தண்டு மற்றும் இடுப்பென்பில் ஏற்படும் அழற்சி என்றே கூற முடியும். இதன் ஆக்கிரமிப்பு பெண்களை விட ஆண்களில் அதிகமாக காணப்படுகின்றது.இந்நோயின் நோயியல் பற்றி கருதும் போது. நிணநீர்க்குழியங்கள் மற்றும் பிளாஸ்மா செல்களின் ஊடுருவலுடன் என்பில் அரிப்பு ஏற்படுவதாலும் இதன்போது ஏற்பட்ட என்பு பாதிப்பு நோயின் நோயியலாகின்றது. இன்னும் சூழற் காரணிகளின் செல்வாக்கு பற்றியும், சிலவகை நுண்ணங்கிகளின் தாக்கத்தினால் ஏற்படும் மூட்டு நோயியலுடன் சான்று பகர முடியாத நிலை காணப்படுகின்றது
இந்நோயானது சில இயல்புகள் கொண்டு வரையறுக்கப்படுகின்றது. அதாவது காலையில் காணப்படும் இறுக்கமான நிலை ஆழசniபெ ளவகைகநௌள 30 நிமிடங்களை விட கூடியதாக இருத்தல், முதுகு நோவானது ஓய்வு நிலையில் அல்லாது உடலியக்கத்துடன் குறைவடைதல் பாதியிரவில் தூக்கம் கலைந்த நிலை அதாவது நோவின் கொடூரத்தால் இதைவிட மாறுபட்ட முதுகு நோ இங்கு முள்ளந்தண்டின் இறுக்க நிலை ளுஉhழநடிநச வநளவ மூலம் மதிப்பிடப்படுகின்றது. இவ்வாறே நோயின் தாக்கம் பெரிதும் பெரிய மூட்டுக்களிலேயே உருவாகின்றது. இடுப்பென்பில் தொடை என்பின் மூட்டில் ஏற்படும் போது கால் நிலையான முன்னோக்கிய மடிக்கப்பட்ட நிலையை எய்துகின்றது. இவை இவ்வாறே அமைய இந்நோயினுடன் கூடவே கண் வலி, ஒளி வெறுப்பு நிலை, பார்வை குழப்பம் போன்ற இதர அறிகுறிகளும் கூட்டு சேரலாம்.
எமது உடலில் காணப்படும் நிணநீர்த் தொகுதியின் ர்டுயு ர்ரஅயn டநரமழஉலவந யுவெபைநளெ உடன் இதன் தீவிரத் தன்மையும் மாறுபடுகின்றது. உதாரணமாக ஆபிரிக்கா மற்றும் யப்பானில் குறைந்தளவிலும் வெள்ளை இனத்தில் அதிக தாக்கத்தையும் காட்டுகின்றது. இந்நோய் நிலையானது சில எளிய குருதி மாதிரிச் சோதிப்புகளாலும் குருதிக்குழிய படிவு விதத்தைநுளுசு அறிதல் மற்றும் ஊசுP போன்ற எளிய குருதி மாதிரி சோதனைகள் மற்றும் ஓசயல மூலம் அதாவது முதுகெலும்பு மூங்கில் மாதிரி உருவை பெறுவதே இங்கு கருதப்படுகின்றது. இவற்றைவிட ர்டுயு வநளவiபெ இ ஆசுஐ ளுஉயn மூலமும் இனம் காணலாம். மேலும் வலி நிவாரணிகள் Nளுயுஐனுளு மற்றும் ளுவநசழுனை iதெநஉவழைn இன்னும் மோசமானதாகவும் சுற்றியல் பரவல் உடையதாக அமையின் ஆநவாழவசநஒயவந மற்றும் யுவெi வுNகு என்பனவும் பயன்படும்.
எது எவ்வாறு இருப்பினும் நோய் கொடூரமான வலியை உணரவைப்பினும் பூரண குணமாதலை 80மூ கொண்டவை என்பது கேட்கும் போது மகிழ்வூட்டும் விடயமாகவெ உள்ளது. ஏனெனில் இந்நோயானது இருபது வயதுகளில் ஆரம்பிப்பினும் அமைதியாக காணப்பட்டு வலியுடன் எல்லைப்படுத்தப்பட்டு காணப்படினும் பிற்காலத்தில் மோசமான முதுகெலும்பு பாதிப்பை ஏற்படுத்தும். எனினும் இளவயதில் இனம் காணப்படின் ஆரேக்கியமான தொரு விடயமாக அமையும் என்றால் வியப்பில்லை.

மழலைகளின் உணவின் போசனையும் சிறுவர் முதுகில் கல்வியும்

கனவுகளை சுமப்பவர்கள் யார் என்றால் கனவுகளை சுமக்கும் வாலிபருவமல்லா பெற்றோர் என்று தான் கூறவேண்டும் தமது பிள்ளை வளர வளர இவர்கள் கனவுகளும் வளர்கின்றது . எமது சமுகத்தில் கல்வி தொடர்பில் பெற்றோரின் அக்கறை மிகவும் கனதியானது என்றே கூறவேணடும் இதில் தவறில்லை எனினும் இவர்களின் போசனை குறித்த வயது பருவத்தில் நன்றாக அமையாது தவறுகின்ற நிலை எமது மக்கள் மத்தியில் தாரளமாகவே உள்ளது என்றே கூறவேணடும் எனினும் குறித்த வயதில் இச்சிறுவர் மீது முதுகில் கல்ஜ வி ஸ சுமையாக ஏற்றப்படுகின்றது
குறித்த வயது காலத்தில் பெற்றேரினால் மேற்கொள்ளப்படும் உணவொதுக்கம் மிகப்பெரியதொரு தமது இலட்சியத்தில் இப்படியொரு பாதிப்பை; உண்டுபண்ணுமென்பதை இவர்கள் அறிந்தும் அறியாதே உள்ளது
அதாவது குழந்தை பிறந்து 6 மாதகாலத்தில் அதன் ஈரலில் சேமிக்கப்பட்ட சேமிப்புணவுகள் முடிவடைகின்றன இது ஒருபுறமிருக்க இவர்களின் குருதியி;ன் சிவப்புநிறமணிகள் அதாவது செங்குருதிச்சிறுதுணிக்கைகள் குழந்தைப்பருவத்திற்குரியதிலிருந்து வயதுவந்தர்கடகான யனரடவ குருதி அமைப்பை பெறும்போது அமைப்பழிவதால் தற்காலிக குருதிச்சோகை ஏற்படுகின்றது. .இவ்வேளையில் ஏற்றகவனிப்பு கிடைக்கத்தவறும் போது குருதிச்சோகை நிரந்தரமாகின்றது இதைவிட இக்காலப்பகுதியில் மேலதிக உணவு ஊட்டல் வேண்டப்படுகின்றது இதன்போது மீன்போன்ற உணவுகள் ஒதுக்கப்படுகின்றன என்றால் அதுமிகைப்படுத்தல் அல்ல நியம் என்றே அமையும் இவை வயிற்றை குழப்பிவிடுகின்றன என்ற எண்ணம் உணவூட்டலை திறனற்றதாக்குகின்றது எனினும் இக்காலத்தில் குழந்தைகளின் நுண் பற்றுதல் அதாவது நுண்ணிய பொருட்களினை விரல்களினால் பொறுக்கி எடுக்கும் திறன் விருத்தியடைகின்றது இதனால் அழுக்குபொருட்கள் இவர்களின் வாயில் நுழைகின்றது இதனால் ஏறபடும் உபாதைகள் தவறாக உணவொதுக்கத்தை நோக்கி நகர்கின்றது இதைவிட குருதிக்கனவளவு போசனைத்தேவை இவையும் அதிகரிக்கினறன
இக்காலவேளையில் இரும்புச்சத்து உணவின் தேவை முதன்மை பெறுகின்றது இங்கு இலகுவில் இச்சத்தை வழங்கக் கூடிய மீன் உணவுகள் பெரிதும் ஒதுக்கப்படுவதே வழமையாகிவிட்டன இதைவிட மீன் உணவு சிறுவரின் முளை விருத்திக்குதேவையான கொழுப்பமிலங்களை கொண்டிருப்பதும் ஏலவே அறியப்பட்டவை என்றுதான் அமையும்
இவற்றைவிட பச்சை இலை வகைகள் உணவெதுக்கத்தில் காட்டும் பங்களிப்பு விஞ்சி ஒருவிடயம் தான் என்றால் மிகையல்ல இதுஒருபுநமிருக்க பச்சை இலைவகைகள் சமயல் செய்யும் போது அவற்றுக்கான தேசிப்புளி சூடான நிலையில் விடப்படின் பயனற்றதாகிவிடும் இரும்புச்சத்தானது புளியில் உள்ள விற்றமின்னுடன் சேரும் போதே அகத்துறிஞ்ச ஏற்றநலையை; அடைகின்றது என்றால் அது மெருகேற்றப்படத உண்மை என்றே கூறவேண்;டும்
மேலும் இவர்களில் உணவுபழக்கம் உணவுஉண்ணும் முறை இவையும் சேர்ந்தே நகர்கின்றது போசக்கின்மை சிறுவர்கள் குருதிpச்சேகைக்கு ஆளாகின்ற ஈர்வை போரின் பின் வலுவடைகின்றது போரின் கொடிய விளைவால் வறுமைநிலையில் சிறுவர்தொழிலாளர் எண்ணிக்கை மனதை நெருடத் தொடங்கிவிட்டது
இவை கவனிக்கமறந்தநிலையில் தொடரின் எமது மண்ணிலும் உலகத்தின் வறுமைக்காட்சிகளை காணமுடியும் இதுவறுமையை மட்டுமன்றி நாட்டின் வளர்ச்சியையும் விமர்சிக்கின்ற விடயமென்றே புலப்படும் போரின் வறுமை ஒருபுறம் இருக்க உணவொதுக்கம் இன்னொரு புறம் இதை எல்லாம் தாண்டி ஆங்கில விளம்பரங்களால் அங்கப்பெருக்கமடையும் சிறுவர் இப்படி முளைத்திறன் குன்றிப்போன சமுகமா நாளை வரப்போகிறது

மனதை உறுத்தும் முகப்பருக்கள்

கனவுகள் பூப்பூக்கும் வயது அது. கற்பனைகள் சிறகடிக்க எண்ணங்கள் கைகால் முளைத்த காற்றாய் காற்றில் பறக்க மாயக் கண்ணாடி முன்னே மணிநேரங்கள் தொலைய கனவுகள் சுமக்கின்ற வயதில் ஒரு தொல்லை …. அதுவொரு கொடுமையப்பா விரக்திவரை கொண்டு செல்கிறது. தன்னம்பிக்கையை இழக்கச் செய்கிறது என்றால் தவறில்லை. எந்தக் கிறீம் பூசியும் பயனில்லை. பாலாடை தொடக்கம் எல்லாம் பூசிக் களைத்து விட்ட நிலை ஐயோ முகமே மேடுபள்ளமாக அவலட்ணம் எல்லாம் முகப்பரு தொல்லையில் இருந்து மீள வழியில்லையா என்ற எண்ணம்..

இளம் வயதினரை முகப்பரு ஆக்கிரமிப்பது மிகப் பெரியதொரு கொடுமை என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆங்கில உச்சரிப்பில் யுஉநெ ஏரடபயசளை எனப்படும். இதில் உள்ள மாயம் என்னவென்றால் பருவம் அடையும் வயதில் வருகின்ற பருக்கள் 25 வயதை அண்மித்த கால வயதில் தானாகவே மாயமாகிவிடுகின்றன. எனினும் சிலரில் அது தொடர்ந்தும் நிலைப்பதுண்டு.

இந்நோயின் தாக்கம் 16 – 19 வரையான கால வயதில் அதிகம் வழுவழுப்பை தோலுக்கு வழங்கும் நெய்சுரப்பிகள் அடைபடுவதன் மூலம் அங்கு ஏற்படும் அழற்சியால் முகப்பருக்கள் மிகப் பெரும் வருத்தத்தை மனதில் தருகின்றன.

இது ஆளுக்கு ஆள் வேறுபட்டதாக அமையலாம். இது நெய்சுரப்பின் சுரப்பு பதார்த்த அளவும், ஓமோன்கள் ஆண்களில் விதை, பெண்களில் சூலகம் மற்றும் அதிரீனல் சுரப்பி இவற்றினால் உருவாக்கப்படும் ஓமோன்கள், இவை தவிர கிருமித் தொற்று Pசழிழைniடியஉவநசரைஅ இது நெய்ச்சுரப்பிகளில் பரவி தாக்கத்தை தருகின்றன. இதைவிட முகப்பருக்கள் குடும்பத்தினரிடையே காணப்படினும் அவை தொடரலாம்.

இது உணவுமுறை சூழல் ஆகியவற்றுடன் சில தொடர்புகள் கொண்டனவாக நம்பப்படுகின்றன. எனினும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. கொழுப்புப் பதார்த்தங்கள், எண்ணெய், அனிப்பு வகைகள் இவற்றுடன் நேரடியாக எந்தத் தொடர்பும் அற்றது.

இது பல்வேறுபட்ட வகைகளை கொண்டுள்ளது. ஐகெயவெடைந குழந்தைகளில் வரும் இதற்கு தாயிலிஇருந்து பெறப்பட்ட அந்ரோஜன் வகை ஓமோன் காரணமாகும். ளுவநசழனை யஉநெ. இது ஊரளாiபெ ளுலனெசழஅ ழச ளவநசழனை தொடர்ச்சியான பயன்பாட்டில் ஏற்படுகின்றது. ழுடை யஉநெ தொழிற்சாலைகளில் எண்ணெய்ப் பதார்த்தங்களின் கையாளுகையால் ஏற்படுகிறது. யுஉநெ கரடஅiழெரள. இது பொதுவாக இளவயதினரில் ஏற்படுகின்றது. இதைவிட குழடடயைடெயச ழுஉஉடரளளவழைn வசயைன. இது கறுப்பு ஆபிரிக்கர்களில் உருவாகும் ஒருவகை என்றே கூறலாம்.

இவை இவ்வாறிருக்க முகத்தை மிருதுவாக்குகின்றது என நினைத்து கொண்டு நாம் பயன்படுத்துகின்ற சிலவகை பவுடர்களும் முகப்பருவை மிகையாக்குகின்றன. அவ்வாறே கருத்தடை மாத்திரைகள், சில வலிப்பு மாத்திரைகள் இவையெல்லாம் முகப்பருப்பு காரணமாகின்றன.

முகப்பருவை எதிர்கொள்ள கிருமித் தொற்று, சுரப்பு, மற்றும் சுரப்புக்களில் ஏற்படும் அடைப்பை தவிர்த்தல் என அமைகின்றது.

முகப்பருக்களை உடைப்பதோ, நசிப்பதோ, கிள்ளுவதோ வேண்டத்தகாத செயற்பாடுகள் என்றுதான் கூறவேண்டும். இதனால் வடுக்கள் தோன்றுவதும் சில சமயம் அவை மறையாதுவிடும்.

முகத்தை சோப்பும் நீரும் கொண்டு ஒழுங்காக சுத்தம் செய்தல் வேண்டும். கிருமித்தொற்றை குறைக்க ஊhடழசாநஒனைiநெஇடிநணெழலடிநசழஒனைநஇ வுசநவiழெinஇ யனயியடநநெ போன்ற மருந்துகள் இவற்றை வைத்திய ஆலோசனையுடன் பூசுவது நன்று இவற்றின் செறிவு வேறுபட்டதாக பல தயாரிப்புக்கள் காணப்படுகின்றன. இது மருத்துவ ஆலோசனையின் கீழ் பல மாதங்களும் தொடரும் வாய்ப்பு உள்ளது.

இதைவிட சீழ் பிடித்து இருப்பின் நுசலவாசழஅலஉinஇ அநவசழnனையணழடந கலந்த களிம்புகள் அல்லது மாத்திரைகள், ழுஒலவநவசயஉலஉடiநெஇ நுசலடாசழஅலஉiநெ போன்றனவும் பயன்படும்.

இன்னும் இருப்பின் ஐளழவசநவiழெn என்னும் மருந்து ஊலிசழவநசழநெ என்னும் ஓமோனும் மருந்தும் பயன்படும் இவை எல்லாம் வைத்தியரின் ஆலோசனையின் கீழ் அமைதல் வேண்டும்.

இவைதாண்டி சீழ் கட்டிபட்டிருந்தால் சீழ் சிறு சத்திரசிகிச்சை அல்லது ஊசி மூலம் உறிஞ்சி அகற்றப்படும். அதைவிட நுண்ணிய ஊசிகளால் சில மருந்துகள் வுசயைஅஉiழெடழநெ யஉநவயவந போன்றனவும் இப்பருக்களுள் ஏற்றலாம்.

தாய்ப்பாலூட்டுவதால் உடலழகு குறைவதில்லை உயிராபத்தே குறைகின்றது

.

நவீன உலகில் அன்பு, பாசம் என்பன எல்லாம் அருகிப் போகின்ற போக்கில் உள்ளது போலவே தாய்மை உயர்வும் அப்படியே சென்று கொண்டு போவதைக் காண முடிகின்றது.

இவற்றில் ஒன்றுதான் தாய், சேய் இணைப்பு என்பது. தற்போது பாலூட்டுவதைப் பெரும்பாலும் தவிர்த்துக்கொள்ளும் மனப்பான்மை வலுவடைந்து செல்கின்றது. எனினும் இதற்கு முரணாகவே நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களும் ஆய்வுக் கற்கைகளும் நகர்கின்றன. பல ஆய்வுக் கற்கைகளின் மூலம் பெறப்பட்ட முடிவுகளே இங்கு தரப்படுகின்றது.

தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் ஒரு குழந்தை மிக அதிகளவு பயன்களைப் பெறுகின்றது. அதே வேளையில் தாய்ப்பால் ஊட்டுவதால் குழந்தைக்கு ஏற்படும் பயன்கள் பற்றி அறிந்து தாய்மார்கள்கூட தமது உடல் அழகைக் கருத்திற்கொண்டு அதைத் தவிர்ப்பதைக் காணமுடிகின்றது.

தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் ஒரு குழந்தை மிக அதிகளவில் பயன்களைப் பெறுகின்றது. அதேவேளையில் தாய்ப்பால் ஊட்டுவதால் குழந்தைக்கு ஏற்படும் பயன்பள் பற்றி அறிந்து தாய்மார்கள் கூடத் தமது உடல் அழகைக் கருத்திற்கொண்டு அதைத் தவிர்ப்பதைக் காண முடிகின்றது.

தாய்ப்பால் ஊட்டுவது என்பது நினைக்குமளவிற்கு எந்தவொரு தாயினது உடல் அழகையும் குறைக்கும் என்றில்லை. உடலில் தேவைக்கு அதிகமாக வேண்டாத பாகங்களில் கொழுப்பு தேங்குவதைக் குறைக்கும். அதாவது நாரிப் பகுதி, வயிற்றுப் பகுதிகளில் சேரும் கொழுப்பின் அளவைக் குறைக்க இது பெரிதும் உதவும். இங்கு உடலின் ஓமோன் சமநிலை ஒன்றும் உருவாக்கப்படுகின்றது. இவற்றினால் மேலும் பல நன்மைகளைத் தாய் பெறமுடிகின்றது.

பாலூட்டல் என்பது வெறுமனே புட்டிப்பாலைக் குழந்தை உறிஞ்சுவதன் மூலம் அதை அருந்திக் கொள்வது போன்றதொரு தொழிற்பாடு அல்ல, பால் சுரக்கப்படுவது தொடாக்கம் வெளியேற்றப்படுவது வரை சுரப்பிகள் பலவற்றின் ஒருங்கிணைப்பும் ஓமோன்கள் பலவற்றின் பங்களிப்பும் நடைபெறுகின்றது.
இது அங்கங்கள் அதாவது மூளையின் பல பகுதிகள் சுரப்பிகள் என்பவற்றுடன் தொடர்பாக தகவல் பரிமாற்றங்களுடன் நடைபெறும் ஒரு பொறிமுறையாகவே உள்ளது.

இவ் உடல் அழகு என்னும் விடயத்தைப் பலபடிகள் தாண்டி மார்புப் புற்றுநோய்க்கான ஆபத்தை மிக உயர் அளவில் குறைக்கின்றது.

நாட்டுக்கு நாடு மனித இனத்திற்கு இனம் பாலூட்டும் தன்மை, கால அளவு என்பன வேறுபட்டுக் கொண்டே போகின்றது. இது அந்நாட்டின் கலாசாரத்தைத் தழுவியதாகவே காணப்படுகின்றது.

பாலூட்டலால் உடலில் ஓமோன் சமநிலை ஏற்படுவதுடன் ஈஸ்திரோஜன் என்னும் ஓமோனின் அளவு குறைவடையும் போது மார்புப் புற்றுநோய்க்கான ஆபத்தும் குறைவடைகின்றது.

இவற்றுடன் சூலகத்தின் சூல்கொள்ளல் தவிர்க்கப்படுகின்றது. இவற்றினால் புற்றுநோய்க்கான சாத்தியக்கூறு மேலும் வலுவாகக் குறைக்கப்படுகின்றது.

இவற்றைவிட பாலூட்டும் போது வெளியேறும் பாலில் கொழுப்புத் தன்மை இருப்பதால் தாயின் உடலில் சிலவகையான கொழுப்புக்கள் குறைக்கப்படுகின்றன. இதனால் புற்றுநோய்க்கான உருவாக்கிகள் (யுனipழளந வளைளரந இல் தங்குவதற்கான வாய்ப்பு அரிதாக்கப்படுகின்றது.

மேலும் பாலூட்டுவதன் மூலம் மார்பின் பாற்கான்களின் அகவணியில காணப்படும் கலங்க் விகாரமடையும் தன்மை குறைக்கப்படும். இதனால் புற்றுநோய்க்கான விகாரங்கள் உருவாதல் தவிர்க்கப்படுகின்றது.

பொதுவாகப் பாலூட்டுவதனால் மாதவிடாய் நிறுத்தத்திற்கு முன்னான வயது காலப்பகுதியில் பெண்களில் ஏற்பட்கூடிய வகையான புற்று நோய்க்கான வாய்ப்புக குறைகின்றது.

தாய்ப்பாலூட்டலினால் குழந்தை பெறும் நன்மைகள் பலவுண்டு. எனினும் இவற்றையெல்லாம் விஞ்சியதாகக் குழந்தை எதிர்காலத்தில் வளரும் காலங்களில் மார்புப் புற்றுநோயின் தாக்கத்திற்கு ஆளாவதும் குறைக்கப்படுகின்றது.

தொற்றுநோய், சுவாசநோற், மற்றும் பல நோய் நிலைகளின் தாக்கமும் வலுக்குன்றியதாகவே காணப்படும்.

மேலும் பாலூட்டலினால் மகப்பேற்றின் பின்னரான காலணங்களில் ஏற்படும் குருதியிழப்பு குறைகின்றது. அத்தோடு தாயானவள் தனது மகப்பேற்று காலத்தின் முன்னான கால உடற்பருமனை விரைவில் அடையவும் முடிவதுடன் என்பு வன்மையடைவதற்கான கல்சியம் மீள்உருவாவதற்கான பொறிமுறையை மேலும் துரிதப்படுத்துவதால் முதிர்வின் போது ஏற்படும் என்பு முறிவு நோய் (Phலளழைடழபiஉயட குசயஉவரசந ) இல் இருந்தும் பாதுகாக்கப்படும்.

தாய்ப்பாலூட்டல் என்பது சமூகத்தில் அண்டி பாசத்தை கட்டியெழுப்புவதுடன் உடலை கட்டழகாகவும் பேணுவம் நோய் நிலைகளில் இருந்து தப்பிக் கொள்ளவும் உகந்த வழிமுறையாகும்

வலியின் மூலத்தை வேருடன் களைவதா???

வலிநிவாரணிகள் தலைவலிஇ முதுகுவலிஇ மூட்டுவலி போன்றவற்றிற்கு பரிந்துரைக்கப்படுகின்றன. எனினும் இவை மூட்டுவலிஇ முதுகுவலி போன்றவற்றிற்கு குறிப்பிட்ட சில காலம் வரை பயன்படுத்துதல் ஏற்புடையது. வலி நிவாரணிகளை தொடர்ந்தும் பாவிப்பதன் மூலம் உடலுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படும். வலியானது எமது உடலின் இழையங்களின் சிதைவின் போது உருவாக்கப்படும் இரசாயன பொருட்களினால் நரம்புகள் தூண்டப்படும்போது ஏற்படும் ஓர் உணர்வு ஆகும்.இது ஒரு நோயல்ல.
இதற்கான தோற்றுவாயை இனங்கானதவரை வலி நிவாரணிகளை தொடர்ந்து பாவிப்பது அருவருக்கத்தக்க விடயமாகும். பொதுவாக முதுகுவலி மார்புபுற்றுநோய் தொடக்கம் முன்னிற்கும் சுரப்பிப்புற்றுநோய் மற்றும் ஏனைய அநேக புற்றுநோய்களும் ஏற்படலாம்.
வயிற்றுவலியானது குடற்புண் குடல்வளரியில் ஏற்படும் அழற்சி மற்றும் சூலகக்கட்டிகள் குடல் முறுக்கமடைதல்இ சிறுநீர்சணனித் தொகுதிசார் நோய்களிலும் ஏற்படலாம். இவ்வாறான நிகழ்வுகளில் வலியை குணப்படுத்துவதை விட வலியின் தோற்றுவாயை விரைவில் இனங்காணவேண்டிய தேவை உள்ளது. வயிற்றுவலியால் பாதிப்புற்றிருக்கும் போது வலி நிவாரணிகளை பயன்படுத்தும் வேளைகளில் வலியின் தன்மை முற்றுமுழுதாக மறைக்கப்படுகிறது.
வயிற்றுவலியை ஏற்படுத்தும் நோய் மூலத்தை இனங்காணும்போது வலியின் தொடர்ச்சித்தன்மை வலி உணரப்படும் விதம் வலி நிலைக்கும் கால அளவு வலியின் பரவுகைத்தன்மை வலியை அதிகரிக்கும் காரணிகள் வலியுடன் சேர்நத சில குணங்குறிகள் என்பவற்றைக் கொண்டு வலியின் தோற்றுவாய்க்குரிய உள் உறுப்பை இனங்கானமுடியும்.
இதன்மூலம் வயிற்றுவலியை ஏற்படுத்தும் உயிராபத்தை விளைவிக்க்கூடிய நோய் நிலைகள் ஏதும் இருப்பினும் உடனடியாக இனங்கண்டுகொள்ளலாம். அத்துடன் விசேட கதிர்ப்பட சோதனைகள் கழியொலி நுண்ணொலி (ருடவசய ளுழரனெ ளுஉயnநெச) போன்றவற்றின் துணையுடன் மோசமான உயிராபத்தை விளைவிக்கக் கூடிய வயிற்றுவலியை உருவாக்கும் நோய் நிலைகளை காலதாமதமின்றி இனஙகண்டு ஏற்ற சிகிச்சைகள் வழங்கமுடியும்; ;
வலி நிவாரணிகளால் வயிற்றுப்புண் ஏற்பட்டு தொடர்ந்து வலுப்பெறுவதால் குடலில் அல்லது இரப்பையில் துளைகள் ஏற்பட்டு உயிராபத்து ஏற்படும் சந்தர்ப்பங்களும் உருவாகின்றது..

இளவயதில் பாரிச வாதம் ஏற்படுத்தும் புகைத்தல

பாரிச ளவசழமந என்பது யாவரும் அறிந்த ஒரு விடயமாகும். இதில் கை கால்வழங்காது
போதல் அல்லது இழுத்தல் குரல் மாற்றம் முகம் கோணலாதல் (இது முகவாதம் )என்பன
கானப்படலாம்
இது தொடர்பாக யாவர் மனதிலும் பயம்
காணப்படுகின்றது. அத்துடன் பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கட்கு மனச்சோர்வு
ஏற்படுவது கருதத்தக்க விடயமாகும். பாரிசவாதத்தின் பிடியில் இருந்து மீண்டு விடினும்
பாரிசவாதத்திற்கு ஆளானவர்கள் தம்மை தாமே குறைத்து மதிப்பிடும் தன்மையம் தங்கி வாழும்
நிலையையும் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றனர்.



இதைவிட பாரசவாதத்தினால் ஒருவர் பாதிப்புறும் போது அவரது முழுக்கு குடும் பமுமே
அவரினால் பாதிப்புறுவதுடன் அவர்களுக்கான பராமரிப்பு என்ற தொடர் நிலையை சகிக்க
முடியாமல் கூட சகிக்கின்ற நிலை நம் சமூகத்தில் காணப்படுகின்றது.



பெரும்பாலும் முதுமை நிலையில் பாரிசவாதம் ஏற்படினும் இளவயதினருக்கு ஏற்படுவதற்கான
காரணங்களில் முக்கிய இடத்தை புகைத்தல் பெறுகின்றது.



ஒருவர் வயது முதிர்ந்த நிலையில் பாரிசவாதத்தால் பாதிப்புறின் அவர் பெரும்பாலும்
ஏனைய குடும்பத்தினில் தங்கி வாழ்கின்றவராகவே காணப்படுவார். எனினும் இளம் வயதினரை
தாக்கும் போது தாக்கப்படுபவர் குடும்பத்தின் தலைவராகவும் முழுக்குடும்பத்தையும் கொண்டு
நடத்துகின்ற பொறுப்புக்குரியவராகவும் இருப்பதால் இதன் பாதிப்பை கருத்தில் கொள்வது
மிகவும் முக்கியமான ஒரு விடயமாகவே உள்ளது.



புகைப்பதனால் அதாவது சிகரெட்டில் காணப்படும். நிக்கோட்டின் என்னும் பொருள்
குருதிக்குழாயில் அடைப்பை ஏற்படுத்துகின்றது.



இவ் அடைப்பானது இதயத்திற்கு குருதி வழங்கும் குழாய்களில் ஏற்படின் மரடைப்பு ;
எனவும் மூளைக்கு குருதி வழங்கும் குழாய்களில் ஏற்படும் போது பாரிசவாதம் எனவும் பெயர்
கொள்கின்றது.



இங்கு குருதிக்குழாயின் அகவளி பாதிப்புறுவதுடன் குருதிக்குழாயில் கொழுப்புப்
படிவுறுவதுடன் குருதிக் குழாயின் உள்விட்டம் குறைக்கப்படும் இதன் ஈற்று விளைவாக குருதி
விநியோகம் தடைப்படும்.



இவற்றுடன் மட்டு அல்லாமல் புகைத்தல் பல கூட்டு வளைவுகளையும் தன்னகத்தே
கொண்டிருப்பதால் அதாவது குருதியில் ர்னுடு என்னும் நல்ல கொழுப்பு வைகயின் அளவை
கறைப்பதுடன் மட்டுமல்லாது உயர் குருதியமுக்கம், நீரிழிவு, இவற்றுடன் மட்டுமல்லாது இரத்த
கழாயினுள் குருதி உறையும் தன்மையையும் என்றும் பாதக விளைவுகளை கொண்டிருப்பதால் புகைத்தல்
பாரிசவாதத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு மிகையாக்கப்படுகின்றது.



புகைத்தல் பற்றியும் புகைப்பதால் எற்படும் விளைவுகள் பற்றியும் யாவரும்
அறிந்திருப்பினும் இந்நிலை தொடர்பாக தெரிந்திருப்பினும் பாரிசவாதம் பற்றி
அறிந்திருப்பினும் புகைப்பவர்களை அதிலும் இளவயதினரை தாக்கும் இந்நிi தொடர்பாக
போதியளவு தெளிவின்மை காணப்படுகின்றது. அத்துடன் மட்டுமல்லாது பாரிசவாதத்தால்
தாக்கப்பட்டவர்க்கே அவரது மனநிலை தெரியும். பாதிக்கப்பட்டபின் ஞானம் வருவது என்பது
அவ்வளவுக்கு ஏற்படைய விடயமல்ல.


வருமுன் காப்பதே நன்று

தொற்று நோய்கள் இன்னும் இன்னும்……… கூடுமா?

தற்போது டெங்கு நோயின் தீவிரம் சற்றேகுறைந்துவிட்டது எனினும் நெருப்புக் காயச்சல் போன்ற நீரால்த் தொற்றும் நோய்கள் பற்றிக் கவனத்திற் கொள்ள வேண்டியது மக்களின் முக்கிய கடமையாகும்.

நீரூடாக நெருப்புக்காய்ச்சல், வாந்திபேதி, கொலரா போன்ற பல நோய்கள் ஏற்படும் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவை பற்றி விபரிப்பதில் அர்த்தமில்லை. இவற்றின் தோற்றுவாய்களை இனங்கண்டு துரித கதியிற் செயற்பட வேண்டியே உள்ளது. இதுவே காலத்தின் தேவையாகும். தற்போது யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறை மிகவும் விறுவிறுப்பாக வீறுநடை போடுகிறது என்றே சொல்லாம். எனினும் மிகமிகக் குறைந்த வசதிகளுடனேயே அதுநடை பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

குறிப்பாக மருத்துவ ரீதியாக அதாவது சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு வீடுகள் அமைக்கப்படும்போது பல விடயங்கள் கணக்கில் எடுக்கப்படும். அவை எல்லாம் ஒருபுறம் இருக்க நெருக்கடி அதிகரித்;து விட்டது. மேலும் மேலும் தொற்றுநோய்கள் உருவாகின்றதற்கான நிரந்தர மூலங்கள் உருவாக்கப்படும் நிலமை ஏற்படுகின்றது. எமது மண்ணில் நோய் இனங்காணப்படுவதும் அதற்கான மூலம் எதுவென இனங்காண்பதற்கும் இரசாயன ஆய்வு வசதிகள் போதாத நிலை காணப்படுகின்றது. எமது கல்வி பெரிதும் பரீட்சையை மட்டுமே நோக்காகக் கொண்டு எந்தவொரு ஆய்வுகளும் திறம்பட நடப்பது என்பது அரிதாகவே காணப்படுகின்றது. இப்படியான நிலையில் புதிய வகையான சூழலுக்கு, சகிக்கும் திறன் கூடிய நோய்க்கிருமிகள் உருவாகும் சந்தர்ப்பம் அதிகம் ஏற்படலாம்.

உதாரணமாக நெருப்புக்காய்ச்சல் எனின் எந்தவகையான நுண்ணுயிரி அதை உண்டு பண்ணுகின்றது என்பதை இனங்கண்டு அதை அழிப்பதற்குரிய வகையான நுண்ணுயிர் கொல்லிகளைப் பயன்படுத்தலாம். பொதுவாக எல்லா நுண்ணுயிர் கொல்லிகளும் எல்லா வகையான நுண்ணங்கிகளையும் கொல்லுமா? என்றால் இல்லை என்றே கூற வேண்டும். இவற்றின் தொழிற்பாடும், ஒரு ஏவுகணை விமானத்தை எவ்வாறு தாக்குகிறது என்பது போன்றுதான் வெப்ப நாடிவகை ஏவுகணைகள் வெப்பத் தோற்றுவாய்கள் இருப்பினே விமானத்தைத் தாக்கும் அதுபோன்றே நுண்ணங்கிகளையும் சிலவகை அடையாளப்படுத்தல் ஊடே நுண்ணுயிர்க் கொல்லிகள் தாக்குகின்றன. இவ்வகை அடையாளப்படுத்தல் என்பது சில புதியவகை விகாரத்திற்குள்ளான நுண்ணங்கிகளில் சாத்தியமற்றதே இதனால் மருந்தின் தாக்கும் வலுவும் குறைந்து போகின்றது. மருந்து பயன்படுத்தியும் கட்டுப்படு;தமுடியாது பேகின்றது..

இவையாவற்றினையும் விஞ்சி எமது மக்களிடம் சுயமருந்துப் பாவனையும் மருந்துகளின் தவறான பாவனையும் மித மிஞ்சிய நிலையில் காணப்படுகின்றது. நுண்ணுயிர் கொல்லி மருந்துகளின் பாவனையும் அதிகரித்துவிட்டது. எனவே மருந்துகளுக்குப் பழகிப்போன கிருமிகள் என்ற நிலை காணப்படுகிறது. எனவே நொய் கட்டுக்கடங்காத நிலை உருவாகவும் கூடும்

தற்போது உள்ள நடப்பு யாழ்ப்பாணத்தில் மலக்கழிவுகள் குடிநீரில் கலக்கும் தகவு மிகையாகவே காணப்படும் நிலை உருவாகிவருகிறது. குறிப்பாக மண்ணின் வடிகட்டும் தகவு பற்றிய எண்ணக்கருக்கள் எவ்வளவு தான் எற்புடையதே என்று கேட்கும் அளவிலே தான் உள்ளன… ;. மற்றும் மலக்கழிவில் பல நுண்ணுயிர்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட வகையான நுண்ணுயிரிகள் ஒரு நோயை உண்டு பண்ணும் சந்தர்பம் காணப்படுகிறது. இதனால் ஏற்படும் நோயும் குறித்த ஒருவகையான நுண்ணுயிர் கொல்லியால் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் இவற்றுடன் இந்நுண்ணுயிரிகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ள போதியவசதிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் இது மேலும் கடினமாகிறது.

இதைவிட நகரின் நெருக்கடி கூடிய பகுதிகளில் மலசல கூடங்களின் அதிகரித்த பாவனை ஏற்பட்டுள்ள நிலையில், சுகாதாரத்துறை மேலும் விருத்தி செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது. இவ்வாறான நிலையில் தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்களிடம் இவை ஒப்படைக்கப்படின் வேலைவாய்ப்பு வசதிகள் அதிகரிக்கும்@ அத்துடன் சுத்திகரிப்பு தேவை இயன்றளவு பூர்த்தி செய்யப்படும் நிலை உருவாகும்.

இவ்வாறான சுகாதார வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். இல்லாவிடின் நீர் மூலம் தொற்று ஏற்படுவதற்கான நிரந்தர தோற்றுவாயாக குடிநீர் அமையும் தன்மை காணப்படும். இவை மட்டுமல்லாது தோல் நோய்களும் கூடவே ஏற்படும் தகவும் உருவாகும்.

……………………………………..

மருந்து வில்லைகளுடு மட்டும் தானா மருத்துவம்

எமது சமூகத்தில் தற்போது குறித்த வயது எல்லையை தாண்டினால் டாக்கடரை நாடி
செல்பவருக்கு ஏதாவது நோய் ஒன்று இருப்பதாக அடையாளம் இட வேண்டிய தேவை உள்ளது.
இல்லாது போனால் டாக்கடர் தரமற்றவர் என்று ஒரு புதிய கலாச்சாரம் காணப்படுகிறது.
இவற்றை எல்லாம் விஞ்சி உறவினர் காணும் போது கூட மக்கள் எனக்கு இன்ன இன்ன
நோய்கள் இருக்கிறது.; உங்களுக்கு எப்படி என்று கேட்கும் நிலைதான் சுகம்
விசாரித்தல் என்று அர்த்தப்படுவதாக உருவாகிவிட்டது.

பொதுவாக குறித்த வயதின் பின் ஏதாவது ஒரு நோய் இருப்பதாக கூறி அதற்காக
வைத்தியசாலை செல்வது அத்துடன் ஏதேனும் மருந்து எடுப்பதாக சொல்வது தான் நாகரிகம்
என்று சொல்கின்ற நிலை..

இவ்வாறான மக்கள் கட்டிடத்தை வியாபார நோக்கங்களில் நகரங்களில் அணுகுவதற்கு
மருத்துவ மனைகள் தயாராகிவிட்டன. இங்கு மருத்துவம் மூடுமந்திரம் என்ற நிலை இன்னும்
காணப்படுகின்றது. நவீனமருத்துவ உலகின் போக்கினைப் பார்த்தால் மருந்துகளை
நோக்கி செல்வதாக அன்றி வாழ்க்கை முறை மாற்றங்களையே நாடிச் செல்கின்றது.

சுருக்கமாக கூறின் எடுத்த எடுப்பிலேயே மருந்துகளை அள்ளி வழங்கிவிட நவீன மருத்துவ
சிந்தனைகள்தற்போது சிந்திப்பதில்லை. அதற்கு பதிலாக வாழ்க்கை முறையை
வடிவமைக்கும் விதம் பற்றியே அதிகம் கவனம் கொள்கின்றது. எடுத்த எடுப்பிலே
மருந்துகளை பாவிப்பதை தவிர்க்கும் வண்ணமே இவை நகர்கின்றன. ஏனெனில் எமது
வாழ்க்கை முறையில் காணப்படும் சிதைவுகள் பற்றியே கவனத்தில் கொள்ள வேண்டும்.

புகைத்தல், மது ஆரோக்கியமற்ற உணவு முறை பருமனை உடலமைப்பு, உடற்பயிற்சி அற்ற
தொழில்முறை மன அழுத்தத்தை அதிகரிக்கும் விதமான நட்புக்கள் இவ்வாறு
அமைந்துவிட்ட சிதைவுகள் பல நம் வாழ்வில் காணப்படுகின்றன.

புகைத்தல் மூலம் ஏற்படும் தீமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். உயர்குருதி
அமுக்க நோயுடைய ஒருவரை எடுத்து கொண்டால் புகைத்தல், மதுவருந்துதல் உணவுப்
பழக்கம், உடற்பயிற்சி இன்மை போன்றன ஆபத்தை உண்டு பண்ணும் காரணிகளாகவே
உள்ளன.

இவற்றின் ஊடு பாரிசவாதம் வரை செல்லக் கூடிய நிலையை உண்டு பண்ணுகின்றன. உடல்
எடை அதிகரித்தல் மற்றும் உடற்பயிற்சிஇன்மை உணவு ஆரோக்கியமற்ற தன்மை
இவையாவும் ஒன்றில் ஒன்று தங்குகின்றன. இவற்றினூடு உடலின் கொழும்பு சேமிப்பும்
அதன் அளவுடன் சில வகை ஓமோன்களின் செல்வாக்குஇதனுடு மாரடைப்பு ஏற்படும் வீதமும்
மாறுபடு;கின்றது.

இவ்வாறே எமது சூழலில் மன அளைச்சல் அதிகரித்துவிட்டது பொதுவாகி எந்த
பிரச்சனைக்கும் அன்றைக்கு என்ன தீர்வு என்Nறு நிலைக்கும் அளவுக்கு சிந்தனைத்
திறன் குறைவடைந்துவிட்டது. பிரச்சினைகள் பற்றி கூறி முடிவெடுக்க நினைக்கும் ஒருவர்
தொழில் தானங்களில் உயர் அதிகாரிகளிடம் பிரச்சினையுடன் தீர்வையும் சுமந்து
செல்ல வேண்டிய பரிதாபநிலை அத்துடன் உடனடித் தீர்வாக மன உளைச்சலை அதிகரிக்கும்
விதத்தில் ‘ஆப்பு’ வேலைகள் இப்படி ஒரு விச வட்டத்துள் மனஉளைச்சல் செல்கின்றது.
இவற்றுக்கு தீர்வாக தியானம், யோகாசனம், நூல் வாசிப்பு இவை எல்லாம் அருகிப்
போய்விட்டது.

தற்போதைய மருத்துவ ஆய்வுகள் இவற்றையே கருத்திற் கொண்டு தமது போக்கை
மாற்றிச் செல்கின்றன. உதாரணமாக குருதியமுக்கம் உயர்வாக காணப்படுகிறது என்றால்
உடனே மருந்தினுள்.

மருத்துவ உலகம் குதிக்கவில்லை தொடர்ந்து குறிப்பிட்ட கால அளவு வரை
குருதியமுக்கத்தை அளவிட்டு பார்க்கிறது. அதன்பின் சில வாழ்க்கை முறையில்
மாற்றங்களை உருவாக்குகிறது. மருந்துப் பாவனை என்று தொடங்கினால் இடையில்
நிறுத்தாமல் வாழ்நாள் பூராகவும் உபயோகிக் வேண்டி ஏற்படலாம் என்று மருத்துவ
உலகம் கவலை கொள்கிறது. இதனால் ஆபத்தற்ற, பக்கவிளைவற்ற உணவு அமைப்பு
மாற்றம், உடற்பயிற்சி மன அழுத்த குறைப்புக்கு தியானம், யோகாசனம் என்று
நகர்கின்றது.

இவ்வாறே மருத்துவ ஆய்வுகளும் எல்லாத்துறைகளிலும் நகர்கின்றன. அண்மைக்கால்களில்
British medical Journal வெளியான தகவலில் தற்கொலைகளை மனஅழுத்தத்திற்கு
பாவிக்கும் மருந்துகள்சில இளவயதினரில் கூட்டுவதாக ஆய்வு கற்கைகள் கூறுவதாக
தெரிவித்திருந்தது. எமது சூழலில் போரின் விளைவாக அதனூடு தன்னம்பிக்கை
தளர்வுகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். இவ்வேளையில் ஆற்றுப்படுத்தல் போன்ற
ஆபத்தற்ற செயன்முறைகள்மேலும் விரிவு படுத்தப்பட வேண்டும் சில வருடங்களின் முன்
பேராசிரியர் தயா சோம சுந்தரம் வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்டு மிகவும்
திறம்பட ஆற்றுப்படுத்தலை மேற்கொண்டு வந்தமை மெச்சத்தக்க விடயமே ஆகும்.

இவ்வாறு மருந்து மாத்திரைகள் மட்டும்தான் தீர்வல்ல. உடல், உணவு, ஆரோக்கியம்,
உள ஆரோக்கியம் அது தாண்டிய நிலையில் மருந்துகள் என்றாகிவிட்டது மருத்துவத்தின்
போக்கு… மனதும் ஒரு மருந்து தான்

விழுந்து முறிந்ததா? முறிந்து விழுந்ததா?

வயோதிப் பெண்களை தாக்கும் நோய்களில் இதுவும் ஒன்றாகும். இந்யோயானது மாதவிடாய நிறுத்தத்தின் பின்னராக காலங்களில் Ostregen என்னும் ஓமோனின் அளவு பெண்களில் குறைவடைவதால் ஏற்படுகின்றது. இவ் ஓமோனானது என்புக் கலங்களின் வளர்ச்சியில் பெரிதும் பங்களிப்பை செய்கின்றது? என்புக கலங்களின் பெருக்கம் இவ் ஓமோனின் அளவு குறையும் போது குறைந்து போகின்றது. இதனால் முதிர்ச்சியடையும் என்புக் கலங்கள் இறந்து போக புதிய கலங்கள் அதை ஈடுகட்ட முடியாத நிலையில் என்பானது மெலிவடையும். என்பின் வன்மை குறைகின்றது.

இத்தோடு நின்றுவிடாது என்பின் வன்மையை பேணுவதற்கு இவர்களது உணவு கால்வாய்த் தொகுதியில் உள்ள உறுப்புக்களும் உதவி செய்யுமா என்ற ஒரு கேள்வி எழத்தான் செய்கின்றது.

இதைவிட இவ்வயதினரை பொறுத்தவரை உணவு ஒதுக்கங்களும் உடலின் ஒத:துக்கொள்ளாமையும் அதையும் தாண்டி இவர்களின் உடலியக்கமும் இவர்களை மேலும் இந்நோயினுள் நகர்த்துகின்றன.

இங்கு என்புக் கலத்தின் உருவாக்கத்தை எடுத்து நோக்கின்,
Ostrogen ஆஸ்திரோஜன், கல்சியம், விற்றமின் D என்பன முக்கியமாக தேவையானவை. இவையாவும் இச்செயற்பாட்ரைட எல்லைப்படுத்துகின்றன.

இவ்வயதினர் பால் நெய்த்தோலி மீன் போன்ற அஜீரணம் தடைபோடுகின்றதால் இவர்கள் பெரும்பாலுமத் இவற்றை ஒதுக்குவதை காண முடியும்.

இதைவிட இவ்வயதினர் உடலில் சூரிய ஒளி படுவது என்பது அரிது. இவர்களின் வாழ்க்கை முறை இவர்களை சூரிய ஒளியில் இருந்து விலகவே செய்கின்றது.

இவ்வாறான காரணிகள் எல்லாம் இவர்களின் என்பு வன்மையை எல்லை போட்டால் எப்படி இவர்கள் எலும்புகள் மெலியாமல் போகும். இதைவிட சில நோய்களாலும் கல்சியம் என்பை அடைதல் தடுக்கப்படும்.

இவ்வாறு இருப்பின் எப்படித்தான் உள்ளுற உக்கிப் போகின்றன. கறையான் அரித்த மரம் போல் பட்டென்று நொருங்கிப் போகின்றன.

இவ் உடைவுகள் பெரிதும் தொடை என்பில் ஏற்படுகின்றன. உடலின் பாரத்தைத் தாங்க முடியாத பரிதாபத்தில் இவை உடல் சிறிதொரு திருப்பத்துக்கு உள்ளாகும் போதும் இவ் என்புகளின் வடிவமைப்பு நீளத்தன்மை என்னும் இயல்புகளினால் இவை பெரிதும் உடைந்து போகின்றன.

இங்கே என்பு உடைந்து போவதால் விழுகின்றானர். எனினும் நம்மவர்கள் இதை நோக்கும் போது விழுந்து முறிந்து விட்டனர் என்று கருதுகின்றனர்.

இவர்களில் ஏற்படும் இவ் என்பு முறிவை சத்திர சிகிச்சைய+டு குணப்படுவத்துவதே ஏற்றதாகும்.

இதற்கான சத்திரசிகிச்சையின் போது செய்றகையான மூட்டுக்கள் பொருத்தப்படும். இத்னபோது குருதி இழப்பு மிகவும் குறைவு. மற்றும் சத்திரசிகிச்சையின் பின்னரான பராமரிப்பு காலமும் மிகக் குறைவு.

எனினும் இதற்கான சத்திரசிகிச்சை தராத சிகிச்சை முறையை எடுத்து நோக்கின் நோயாளி மாதக் கணக்கில் படுக்கையும் கையுமாகவே இருக்க வேண்டும். இதனால் உடல் என்புகள் மேலும் உக்கிப் போவதற்கும் குருதியானது சில இரத்;த நாளங்களில் உறைந்து உயிராபத்தை நோக்கி நகரவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இவற்றை எல்லாம் விஞ்சி படுக்கைப் புண் என்னும் ஒரு கொடுமையான நிகழ்வையும் சகிக்க வேண்டி அமையும்.

எல்லாவற்றையும் விட மாதவிலக்கு நின்று போன பெண்கள் தமது உணவில் கல்சியம் சேர்ந்த பால், நெய்த்தோல் போன்ற உணவுகள் சேர்த்துக் கொள்வதன் மூலம் வருமுன் காப்போம் மற்றும் வயோதிபத்தை மதிப்பதும் அவர்கட்கான உதவிகளை செய்வதுடள் அவர்களுக்கான என்பு முறிவுக்கான வாய்ப்புக்களையும் குறைத்தல் நன்று.

இவற்றைவிட மாதவிடாய் நின்ற பெண்கள் Hormone replacement treatment என்னும் சிகிச்சையையும் மேற்கொண்டு வருகின்றமை வெளிநாடுகளில் காணக்கூடியதாக உள்ளது.

டாக்டர். வெ.நாகநாதன்

சாதாரண நெஞ்சு வலியுடனும் நீரிழிவு நோயாளிகளில் மாரடைப்பு வரலாம்.

வலியானது உணரப்படும் வகை, கால அளவு, வலியின் பரவுகை என்பவற்றுக்கேற்ப வேறுபடும். இதற்கமைய வலியின் பாரதூரத் தன்மையும் வேறுபடும். நெஞ்சுவலி சுவாசநோய்கள், இரப்பைப் புண், மாரடைப்பு போன்ற நோய் நிலைகளில் ஏற்படலாம். இவை ஒவ்வொன்றின் போதும் ஏற்படும் வலியின் தன்மை இயல்பில் மாறுபட்டதாகக் காணப்படும். இங்கு நாம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய வலி. நெஞ்சை இறுக்குவதைப் போன்ற வலியே ஆகும். இவ்வகையான வலி மாரடைப்பு நோயின் போது பெரிதும் உணரப்படும். எனினும் நீரிழிவு நோயுடையவர்களில் மாரடைப்பு நோய் ஏற்படும் போது நெஞ்சு வலி என்பது பெரிதும் ஏற்படாத நிலை காணப்படலாம்.இதனை அமைதியான மாரடைப்பு. (silent mi) என அழைப்பர். இவ் ஆபத்து நிலை பற்றிய போதியறிவு இன்மையால் நீரிழிவு நோயாளிகளிடையே ஏற்படும் மாரடைப்பினால் மரணங்கள் ஈற்று விளைவாகி விடுகின்றன. மாரடைப்பு நோயை விரைவில் இனங்காண்பதும் காலதாமதம் இன்றி அதற்கான சிகிச்சை முறைகளைச் செயற்படுத்துவதுமே அதன் வெற்றியை அல்லது மாரப்படைப்பில் இருந்து மீள்வதற்கான சந்தாப்பத்தை வழங்குகின்றது. இங்கு கால தாமதம் என்பது அதிகரிக்கும் போது சிகிச்சை பலனளிக்காத நிலை ஏற்படுகின்றது. மேலும் உயர் குருதி அமுக்கம், உடல் நிறை அதிகமுள்ளவர்கள் புகை, மதுவால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் குருதியில் கொலஸ்ரோல் கூடியவர்கள் நீரிழிவு நோயாளிகள் மற்றும் அரிதான உடற்செயற்பாடு கொண்ட வாழ்க்கை முறை உடையவர்கள் உடற்பயிற்சியை நாடாதவர்கள், மேலும் வயதெல்லை 45 ஐத் தாண்டிய ஆண்கள், மற்றும் வயதெல்லை 55 ஐத் தாண்டிய பெண்கள் போன்றவர்கள் மாரடைப்பு நோயின் பிடியில் எளிதில் சிக்கிக்கொள்ளக் கூடியவர்கள். இவர்களில் நெஞ்சுவலி ஏற்படும் போது கவனத்துடன் செயற்படும் போது ஆபத்திலிருந்து மீண்டுவிடலாம் மாரடைப்பு நோயானது பொதுவாக நெஞ்சை இறுக்குவது போன்ற ஒரு வலியாகவே உணரப்படும். அதாவது நடு நெஞ்சுப்பகுதியில் அமுக்குவது அல்லது இறுக்குவது போன்றதாக அமையும். மூச்சுவிட சிரம் ஏற்படுவதும் வலியானது இடது தோட்பட்டை, கை, தாடை பகுதிகளில் உணரப்படலாம். வலியானது தொடர்ச்சியாக 30 நிமிடங்களுக்கு மேல் காணப்படுவதோடு மரண பயமும் ஏற்படும். இத்துடன் வியர்த்தல், வயிற்றுவலி, சத்தி, நெஞ்சுப் படபடப்பு, தலைச்சுற்று, மயக்கம், குளிர்நிலை என்பனவும் ஏற்படலாம். இருப்பினும், சலரோக நோயாளிகளில் மாரடைப்பு பெரிதளவில் வலியை ஏற்படுத்தாது இதயப் பாதிப்புக்களை ஏற்படுத்திவிடும் சந்தாப்பங்களே காணப்படுகின்றது. இவர்கள் சிறிதளவு வலியை உணர்வார்களாயினும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டி உள்ளது. மேற்படி அறிகுறிகள் தென்படும் சந்தர்ப்பத்தில் உடனடியாக சற்றும் தாமதமின்றி மருத்துவ வசதிகள் கூடிய மருத்துவ மனையை நாட வேண்டியது அவசியமாகும். வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயானது நிர்ணயம் செய்யப்படும். இதனை நோய் பற்றிய வரலாறு, மற்றும் சோதனைகளான E.C.G., troponin, T.I என்பவற்றினூடு மேற்கொள்ளப்படும். இவ்வாறு உறுதி செய்யப்பட்ட மாரடைப்பு நோயாளிகளில் இரத்தக் குழாய்களில் ஏற்படும் கட்டி களைக் கரைக்க ஊசி மருந்துகள் அல்லது உட்பாய்ச்சுகை கருவியினூடு மருந்துகள் செலுத்தப்படலாம். மருந்தின் தெரிவு நோயின் தன்மை, நோயாளியின் இயலுமை, இதர நோய்கள் என்பவற்றுக்கேற்ப மாறுபடும். இங்கு Streptokinase போன்ற மருந்துகள் நெஞ்சு வலி ஏற்பட்டு குறித்த கால அவகாசத்துடன் வழங்கப்பட வேண்டும். அன்றேல் இவை வழங்குவதால் பயனில்லாத நிலை ஏற்படும். இங்குதான் காலதாமதம் என்ற சொல்லின் அர்த்தம் உணரப்படுகின்றது. தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் மரணத்தை நோக்கி நகர்வதால் விரைந்து செயற்பட்டு மரணத்தை வெல்வோம். இதயத்தை புத்துயிர் பெறச் செய்வோம்.

டாக்டர். வெ.நாகநாதன்

அழகான உடலைப் பெற ஆரோக்கியத்தை இழக்கலாமா?

பிள்ளைப் பருவத்திலிருந்து யௌவனப் பருவத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு
யுவதிக்கும் கற்பனைகள் சிறகடிக்கும், கனவுகள் பூப்பூக்கும் எண்ணங்கள் கைகால்
முளைத்த காற்றாய் காற்றில் பறக்கும். இதன் வெளிப்பாடாய் அழகிய மெலிந்த உடல்
வாகைப் பெறவேண்டும் என்ற ஆசை மேலிடும்.
அதற்காக:-
 தீவிர உணவுக் கட்டுப்பாடு - severe dieting
 தற்தூண்டல் வாந்தி - self induce vomiting
 அதீத உடற்பயிற்சி - excessive exercise
போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முற்படுவார்கள். இதன் மூலம் உடல் மெலிவதும் அழகான
உடல்வாகு ஏற்படுவதும் உறுதி. எனினும், மோசமான விளைவுகள் ஏற்படும் என்பது மேலும்
உறுதி.

இவ்வாறான நடவடிக்கைகளினால் பல்வேறு தீய விளைவுகள் ஏற்படும்.
 மாதவிடாய் நிறுத்தம் - Amenorrhea மனத்தாழ்வு - Low Mood
 பாலியல் நாட்டம் இன்மை - Lack of sexual Interest
 மலச்சிக்கல் - Constipation \
 தாழ்குருதி அமுக்கம் - Low Blood Pressure
கனியுப்பு சமனிலையின்மையால்
 சந்தம் தவறிய இதயத் துடிப்பு - Cardiac Arrhythmia
 சிறுநீரக செயற்றிறன் குன்றல் - Renal impairment
 வலிப்பு - Epileptic Fits

போன்றவை ஏற்படும் அபாயம் உண்டு.

தற்போது உயர்தர் வகுப்பு, பல்கலைக்கழக மாணவிகள் தாங்கள் அழகிய மெலிந்த
உடல்வாகைப் பெறவிளைவது நம் நாட்டில் காணக்கூடியதாக உள்ளது.சில யுவதிகள் தாங்கள்
அழகாக வரவேண்டும் என்ற அதீத ஆசையினால் உள்ளெடுக்கும் உணவின் அளவைக்
குறைகின்றார்கள்.

இறுதியில் சில உணவுகளைத் தவிர ஏனைய எல்லா உணவுகளையும் தவிர்க்கிறார்கள்.
இதனால் (கபச்சுரப்பி) மூளையின் தொழிற்பாடு பாதிக்கப்படுகிறது. அத்துடன்,
ஓமோன்களின் செயற்பாடும் தடைப்படுகிறது. இத்தகைய செயற்பாட்டால் மாதவிடாய்
நிறுத்தம், மனத்தாழ்வு மற்றும் பாலியல் நாட்டமின்மை போன்றன ஏற்படுகிறது.

அத்துடன், உடல் மெலிந்து அழகு பெறவேண்டும் என்று பேதி மருந்தைப் பாவிப்பது
சிலரிடத்தில் பழக்கத்தில் உள்ளது. இவற்றின் நீண்ட கால பாவணையும்
மலச்சிக்கலை உணடடு பண்ணுகிறது.

இவற்றை விட உணவு ஒதுக்கத்தினால் நார்த்த தன்மையான உணவுகள் போன்றனவும்
தவிர்க்கப்பட்டு மலச்சிக்கல் ஏற்பட வழி வகுக்கிறது. இவற்றுடன் உணவு ஒதுக்கத்தை
மேற்கொள்வதுடன் மாதவிடாய் போதான குருதி இழப்பினால் குருதிச்சோகை போன்ற
நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகிறது.

பொதுவாக அதீத உடற்பயிற்சியாலும் உணவு ஒதுக்கத்தாலும் (கொழுப்பு) உடலிலுள்ள
கொழுபு;பு சேமிப்பு குறைவடைகிறது. இதனால் குளிர் உணர்தல் அதிகரிக்கிறது.

அத்துடன், சில பெண்கள் தமது காலை உணவை உட்கொள்ளாது விடுத்து (skipping meal)
போன்ற போசனத் தவிர்ப்பு நடவடிக்கையினால் (ulcer) குடல் உபாதை ஏற்பட
வாய்ப்பு ஏற்படுகிறது. காலை உணவை விடுப்பதுடன் மட்டுமன்றி வெறும் வயிற்றில்
கோப்பி, தேனீர் போன்றவற்றை அருந்துவது மேலும் குடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பை
அதிகரிக்கிறது.

தன்தூண்டல் வாந்தி

இது சிலரிடம் பழக்கத்தில் உள்ள ஒன்றாகும். உணவு உண்ட பின் சிலர் தமது
கைகளைப் பயன்படுத்தி வாந்தி எடுக்கத் தூண்டும் செயற்பாடாகும். இதனால் வாந்தி
ஏற்படும். இதன் போது இரப்பையிலுள்ள அமிலமும் வாய்வழியே வெளியேற்றப்படுகிறது.
இதனால் பற்கள் பாதிப்புறும். அத்துடன், அமிலச் சமநிலை, கனியுப்பு சமநிலை என்பன
பாதிப்புறுகிறது. இதன் விளைவாக இதயத் முடிப்பின் சந்தம் தவறுகிறது. அத்துடன்,
சிறுநீரகப் பாதிப்புகள், வலிப்பு என்பன ஏற்பட ஏதுவாகிறது.

மெலிந்த உடல் அழகானதுதான். அதறகாக நோயுடன் கூடிய மெலிவை வருந்தி அழைத்து
நமக்கு நாமே தீமையை ஏற்படுத்தலாமா?

ஊக்க மருந்தினால் உருக்குலைக்கப்படும் வாழ்வு

ஊக்க மருந்து என்பவை போதை வஸ்துகள். போதைப்பொருட்கள் பவுடர், குடு, தூள்
என்று பல பெயர்களிலும் அழைக்கப்படும் போதை தரும் பொருட்களாகும். இவற்றில்
சொக்கையின் கெரோயின், மயூவானா அம்பீற்றமின் என பல வகைகள் உள்ளன.
இவற்றின் பயன்பாட்டால் மூளையின் தொழற்பாட்டில் மாற்றமேற்படுகின்றது. இதனூடு
நடத்தை மாற்றங்களும் சிந்தனை தீர்மானங்கள் ஞாபகம் என்பனவும் மாற்றமுறுகின்றன.
இவற்றின் பயன்பாட்டின் போது சிலவகை போதைப்பொருட்களினால் னுழியஅiநெஇ
ளுநசழவழnin என்னும் மனித மூளையின் சுரப்புக்கள் இவற்றின் சுரக்கும் அளவில்
மாற்றம் ஏற்படுகின்றது. இதனால் ஏற்படும் விளைவாக hயடடரஉiயெவழைn அதாவது
எளிமையாக கூறின் சித்தப்பிரமை போன்ற ஒரு தன்மை எனலாம். இதனூடு நடத்தை
மாற்றங்கள் பலவும் நிகழ்கின்றன. இது இவ்வாறு இருக்க

போதைப்பாவனையாளர்கள் பசியின்மை மற்றும் உணவை எடுக்கதவறுதல் போன்றவற்றுடன்
தமது உடற்சுத்தம் போன்ற விடயங்களிலும் தவறும் தன்மை ஏற்படுகின்றது. இவற்றின்
வழியே பொறுப்புகளில் இருந்து விலகுகின்ற தன்மை காணப்படும்.

போதைப்பாவனை ஏற்படும் போது விடுபடுவோம் என்ற எண்ணம் காணப்படும் அது எல்லாம்
எமது மனத்தின் கட்டுப்பாடு என்றே கருதிக் கொள்வார்கள் எனினும் போதைப் பொருள்
பாவனையில்காலஒட’டத்தில் ழூள்கி விடுவதே வழமை இதற்கு போதைப் பொருட்கட்டு சில
இயல்புகள் உள்ளன. அதாவது னுசரப வழடநசயnஉநஇ னுசரப றiவானசயறயட ளுலஅpவழஅ
இவற்றினால் போதைப்பாவனையில் இருந்து விடுபட முடியாது போகின்றது.

drug tolerance என்னும் போது ஆரம்பத்தில் சிறிய அளவு போதைப்பொருளால்
உண்டாகும் விளைவை அனுபவிக்க முடிகின்றது கால ஒட்டத்தில் அதேயளவான விளைவை
அனுபவிக்க கூடுதல் அளவில் போதைப்பொருள் தேவைப்படுகின்ற தன்மையாகும்.
இதுபோதைப்பொருளின் சகிப்புத்தன்மை என்று அழைக்கப்படும்.

drug withdrawal என்னும் போது போதைப்பொருளை கைவிட முடியாத நிலை அதாவது
தொடர்ந்து போதைப்பொருட்பாவனையால் குருதியில் போதைப்பொருள் செறிந்து
காணப்படும் இதன் அளவு குறைவடையும் போது சில பாதிப்பான குனம்குறிகள் தென்படும்.
இதில் வாந்தி தொடக்கம் மாறுபட்ட நடத்தை இயல்புகள் வரை காணப்படலாம்
இவ்வேளையில் போதைப்பொருள் பயன்படுத்தும் எண்ணமும் காணப்படும் இதனால் இவர்கள்
கைவிட்ட போதைப்பொருளை மீண்டும் தொடர வேண்டிய நிலைக்கு உட்படுவர். இதனால்
இவர்கள் நினைப்பது போன்று நிறுத்திவிட முடியாது என்ற எண்ணம் உருவாகும்
தொடர்ந்தும் படுகுழியில் நகர்ந்த வண்ணமே காணப்படுவர். இப்போதை பாவனையின்
போது எச்சரிக்கை அறிகுறிகளாக கண்ணில் சிவப்பு பொருட்கள் காணப்படும்
நித்திரை, குழப்பம், உடற்சுத்தம் மாறுபடல், துர்நாற்றம், உடலில்,
மூச்சுக்காற்றில் உருவாதல். நடுக்கம் போன்றவை இவற்றைவிட வேலையின்
திறன்குறைதல், பணப்பற்றாக்குறை ஏற்படல் இதனால் திருடுதல் சந்தேகக்குணம்
ஏற்படல், தீமை ஏற்படுத்தல் எண்ணங்கள் போன்றனவும் காணப்படும்.

இவற்றைவிட போதைப்பொருட்களை எடுத்துக் கொண்டால் இவற்றுக்கு சுவாசப்
பொறிமுறையின் திறனான செயற்பாட்டை குறைக்கும் இயல்பு காணப்படுகின்றது. இதனால்
மிகைப் போதையூட்டப்படும் போது மூச்சுவிடுதல் அதாவது சுவாசப்பொறிமுறை
பாதிப்புறும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

இவை இவ்வாறிருக்க இவர்கட்கு நோய்த்தொற்று ஏற்படும் வழியாக ஊசிகள் குற்றும்
போது ஏற்படும் இரத்தக் கலப்பு காணப்படுகின்றது. இவர்களைப் பொறுத்தவரையில் ஊசி
மூலம் ஏற்றிக் கொள்வது பற்றியே எண்ணம் காணப்படும் இதன்போது குருதிக்கலப்பு
ஏற்பட்டு மற்ற நபரின் குருதியில் காணப்பட கூடிய hiv மற்றும் hepatitis தொற்று
உறலாம் என்பது பற்றி எண்ணம் சிந்தனை சிறிதும் காணப்படாது இதனால் இவர்கள்
பெரிதும் hiv தொற்றுக்கு ஆளாவது வழமையாகிவிட்டது.

இவ்வாறு பட்ட நிலையை இவர்கள் உணரும் நிலையில் போதை மருந்துப்பாவனையில் உள்ள
போது காணப்பட மாட்டார்கள் போதைப்பாவனையானது தடைசெய்யப்பட்டது எனினும்
கண்டும் காணாமல் இவை விற்பனையாவது சகயம் ஆகிவிட்டன.


இவற்றால் ஏற்படும் பாதிப்பு நீண்டகால விளைவுகளை உணராது இளைஞர்கள் இதனுள்
மூழ்குவதால் மீண்டு எழ முடியாது குற்ற செயல்புரிவோராகவும் சமுதாய சீரமிவுகள்
புரிவோராயும் பாதை மாற்றி கனவுகள் சுமந்த இளமைப்பருவம் சீரழிக்கப்படுகின்றது.

தமிழில் எழுத இங்கே சுட்டுங்கள்

More than a Blog Aggregator