Pages

Sunday, January 2, 2011

இதயத்தை வலுவிழக்க செய்யும் மது போதை

மதுஅருந்துவதால் மாரடைப்பு ஏற்படும் என்பது யாவரும் அறிந்தது. எனினும் மது
அருந்துவதால், இதயத்தின் திறனான செய்பாடு பாதிக்கப்படும் தன்மை பற்றியே இங்கு
கருதப்படுகின்றது. அதாவது இதயத்தின் தசை பாதிப்புக்கு உட்படுத்துவதாலும் அதைத்
தொடர்ந்து மீள் தன்மை இழக்கப்படுவதாலும், திடீர் மரணம் வரை பல தொடர்
நிலைகளை காணமுடிகின்றது.
இதயத்தின் உள்ளறைகள் பெரிதாக்கப்படுவதுடன் இதயம்;பருமனில் பெருக்கும். இதயத்
தசைகள் ஈர்க்கப்பட்ட நிலையில் காணப்படுவதால் இதயத்தின் வலிந்த பாய்ச்சுகையை
திறம்பட செயற்படுத்த முடியாது போகின்றது. இதன்படிநிலைகளாக இதய செயலிழப்பு
ஏற்படுகன்றது, இத்துடன் அல்லாது இதயத்துடிப்பு ஒழுங்கு தவறுதல் போன்றனவும் ஏற்படும்.
இங்கு இதயம் விரிவடைகின்றது. இதனால் குருதிப்பாச்சுகை வலுவிழக்கிறது. அத்துடன்
குருதி இதயத்தின் உள் அறைகளுள் தேங்குவதால் குருதி உறைவதற்கான வாய்ப்பு
அதிகரிக்கின்றது.
இவ்வாறு உள்ளறைகளில் குருதிஉறைவதால் ஏற்படும் சிறுதுணிக்கைகள் குருதியூடு
சுற்றியோட்டப்படடு பாரிசவாதம், மாரடைப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்
வாய்ப்புக்கள் உள்ளன. இவ்வாறான இதயத்தின் திறனான செய்பாடு பாதிக்கப்படும்
தன்மை ; ஏற்பட பல காரணிகள் அமைவாகின்றன. பரம்பரைக் காரணி மற்றும் சூழல்
காரணி, தனி நபரின் நீர்ப்பீடனம் என்பன காரணமாகும். இவற்றில் பரம்பரைக்
காரணியாக என்னும் போது குறித்த நபரின் உறவினர் திடீர் மரணம் மற்றும் இதய
நோய்களால் தாக்கப்பட்டவராக அமையின் மேற்படி இதயத் தசைகளின் வன்மையை
மதுசாரம் மேலும் வலுக்குன்றச் செய்யும் இதனால் இதயம் மிகவும் ஈய்ந்த நிலையை
அடையும்.
இவ்வாறான பரம்பரைக் காரணி உடையவர்கயில் இதயத்தின் திறனான செய்பாடு
பாதிக்கப்படும் தன்மை; ஏற்பட மதுசாரம் மிகவும் காத்திரமான பங்கை
வகிக்கின்றது.
இந்நோய் நிலை 20 – 40 வயதுடையவர்களில் இனங்காணப்படுகின்றது. எனினும்
இனங்காணப்படாமல் திடீர் மரணத்தை ஏற்படுத்தும் போது பரிதாப மரணம்
ஆகிவிடுகின்றது. பொதுவாக ஓர் இளைஞன் 20 வயதில் மது அருந்தத் தொடங்கினால்
மேற்படி நோய் நிலையை அடைவது சாத்தியமாகின்றது.
அத்துடன் பரம்பரைக் காரணிகள் மற்றும் சூழல் காரணியாகள் செல்வாக்கு செலுத்தும்
போது வைரசு நோய்த்தாக்கமும் அமைந்து விடின் குறித்த இளைஞன் இந்நோயால்
பாதிப்புறும் வாய்ப்பு மேலும் மேலும் மெருகூட்டப்படுகின்றது.
பொதுவாகக் இந்நோய் நெஞ்சுவலி, மயக்கம் என்பவற்றை அறிகுறியாகக்
காண்பிப்பினும் அறிகுறி எதுவுமில்லாமல் திடீர் மரணத்தை உண்டு பண்ணும் போது
இனங்காண்பது மிகவும் கடினமாகவே உள்ளது.
இவற்றோடு மட்டுமல்லாது இந்நோயால் பாதிப்புறுபவரின் வேலை செய்யும் வலுவும்
குறைவடையும். இலகுவில் களைப்படைதல் ஏற்படும். இவ்வாறு ஏற்படுவது என்பது வயது
முதிர்ந்த ஒவருக்கு ஏற்படின் அது ஏற்றுக்கொள்ள முடியும் . குறித்த நபருக்கான வேலை
அளவு குறைவாகவே காணப்படும் என்பதால். ஆகவே இளவயதினில் இந்நிலை ஏற்படும் போது
குடும்பம் பாதிப்புறும் நிலை ஏற்படுகின்றது. இதன் பாதிப்புகளும் தொடர் நிலைகளாக
மேலும் மேலும் பாதிப்புற செய்யும்.

No comments:

Post a Comment

தமிழில் எழுத இங்கே சுட்டுங்கள்

More than a Blog Aggregator